உடுமலை, ஜூலை 11- உடுமலை கொங்கல் நகரில் தொல் லியல் துறையால் நடத்தப்பட்டு வரும் அகழ்வாய்வில் அணிகலன்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் கிடைத்துள் ளது. உடுமலை கொங்கல்நகரில் தொல் லியல் துறை சார்பில் அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வ ரசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மேலும், பல்வேறு வளர்ச்சித்திட்ட பணி கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அமைச்சர் மு.பெ.சாமி நாதன் கூறுகையில், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரங்கம் அமைக்கும் பணிகளையும் மற்றும் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வரும் திருமூர்த்தி அணை பொதுக்கால்வாய் சீரமைக்கும் பணி கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து உடுமலைப்பேட்டை சோ.அம்மாபட்டி பகுதியில் நடை பெற்று வரும் கொங்கல்நகரம் அகழாய் வுப் பணி தொல்லியல் துறையின் சார் பில் 2024-ம் ஆண்டுக்கான அகழாய் வுப் பணிகள் நடைபெற்று வருதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வை யிட்டார். அப்போது, இந்த அகழ்வாய் வில் கிடைக்கப்பட்ட அணிகலன்கள் மற் றும் விளையாட்டு பொருட்களை ஆர் வத்துடன் பார்த்தனர்.