districts

img

எல்ஆர்ஜி கல்லூரியில் தொல்பொருட்கள் கண்காட்சி

திருப்பூர், பிப். 23 – திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்  கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம் மற் றும் தொல்பொருட்கள் கண்காட்சி வியாழக் கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியின் வரலாற்றுத் துறை சார் பில் திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் இதை  ஏற்பாடு செய்திருந்தனர். வரலாற்றுத் துறைத்  தலைவர் கிரிஜா ஆரோக்கியமேரி வரவேற் றார். முதல்வர் எழில் தொடக்கவுரை ஆற்றி னார். ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளை தலைவர் பூபதி தொல்லியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். வீரராசேந்திரன் தொல் லியல் மற்றும் வரலாற்று மையத் தலைவர்  க.பொன்னுசாமி, பண்டைய தொல்லியல் பொருட்களை கண்டறிவது எப்படி என்பது பற்றி மாணவிகளிடம் உரையாற்றினார்.  இக்கண்காட்சியில் 2 ஆயிரம் ஆண்டுக ளுக்கு முன் வாழ்ந்த பண்டைய மக்கள் பயன் படுத்திய மட்கலங்கள், தாங்கிகள், குறியீடு கள் பொறித்த பானை ஓடுகள், துளையுடன்  கூடிய சிறு சக்கரம், வண்ண கல்மணிகள், பாசில்கள், இரும்பு உருக்க பயன்படும் சுடு மண்ணால் ஆன ஊதுலை குழாய்கள், கல்  ஆயுதங்கள், விளக்குகள், பஞ்சை நூலாக்க  பயன்படும் தக்களிகள் உள்ளிட்ட ஏராளமான  பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டு இருந் தன. இப்பொருட்களைப் பற்றி ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். இக்கருத்தரங்கில் பேரா சிரியர்கள், மாணவிகள் திரளானோர் கலந்து  கொண்டனர். இறுதியில் மாணவர் மன்றச் செயலர் திவ்யா நன்றி கூறினார்.