தருமபுரி, மே 25- தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை யரங்கத்தில் கலைவிழா 2022 நடைபெற்றது. இதில் கரகாட்டம், சிலம்பாட்டம், காளி யாட்டம், பறையாட்டம் ஆகிய மாணவர்க ளின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நிகழ்த் தப்பட்டது. முத்தாய்ப்பாக, இயற்கை வளம் பாதுகாப்பு, மனிதநேயம், சமத்துவம் பேணுதல், பல்லுயிர் பாதுகாப்பு ஆகிய வற்றை வலியுறுத்தி “பூலோகமும், புவியரச னின் ருத்ரதாண்டவமும்” என்னும் தலைப் பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது. இதில், பேராசிரியர் முனை வர் ஆ.முருகதாஸ், சூரன் கதாப்பாத்தி ரத்தில் வேடமேற்று மாணவர்களை வழி நடத்தினார். இக்கலைவிழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி.கிள்ளிவளவன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப் பேரா சிரியர் முனைவர் கு.சிவப்பிரகாசம் ஒருங்கி ணைத்தார்.