கோவை, மே 25- கோவையில் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடு பட்டு வந்த நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய் தனர். கோவை மாநகரில், மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள் மற் றும் நகரப் பேருந்துகளில் அடிக்கடி பிக்பாக்கெட் நடந்து வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து கண்காணித்து கொள் ளையர்களை மடக்கி பிடிக்க மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினர் ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரோட்டோரம் நிறுத்தியிருந்த ஜனகரத்தினம் என்பவரது காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 2 மடிக்கணினிகளை ஒரு வர் திருடி கொண்டிருப்பதை பார்த்த காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதன்பின் அவரி டம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், அவர் குணா என்கிற குணசேகரன் (52) என்பதும், கோவை சுக்கரவார் பேட்டை மில் ரோட்டை சேர்ந்த வர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடமிருந்த 2 மடிக்கணினிகள் மற்றும் ரூ.1,500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து காவல்துறை யினர் குணசேகரனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் மீது பல்வேறு வழக்குள் நிலுவையில் இருப்பதும், 4 முறை குண்டர் தடுப்பு சட் டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர் என் பதும் குறிப்பிடத்தக்கது.