சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே விவசாயிகளின் விளைநிலத்தை அமலாக்கத்துறை மூலம் அபகரிக்க துடிக்கும் பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.