கோவை, டிச.23– இரு மதத்தாரிடையே பிரி வினை மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் மார்க்சிய, அம்பேத் கரிய, பெரியாரிய கூட்டமைப்பி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகி யோரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து மார்க்சிய, அம் பேத்கரிய, பெரியாரிய அமைப்பு கள் சார்பில் அளித்த புகார் மனு வில் கூறியிருப்பதாவது, கோவை பாரதியார் பல்கலைக்கழம் முன்பு புதனன்று அனுமதியின்றி பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக முன்னாள் தேசிய தலை வர் எச்.ராஜா தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தின் போது எச்.ராஜா தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மற்றும் அமைச் சர்கள் குறித்து அவதூறாக ஒரு மையில் பேசினர். மேலும், பிரி வினை மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் வேற்று மதத்தினரை பகைமை ஏற்படுத் தும் வகையிலும் பேசினார். இதேபோல், திராவிட இயக் கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப வீரபாண்டியன் குறித்தும் தரக்குறைவாக பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வெளி யாகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள தோடு, கடும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. ஆகவே, வன் முறை, பிரிவினையை ஏற்படுத் தும் வகையில் பேசிய எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தனர். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இவ் வமைப்பினர் தலைமையில் பழங் குடியின மக்கள் இனைந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.