ஆகாய கங்கை அருவியில் ஆய்வு
ஆகாய கங்கை அருவியில் ஆய்வு நாமக்கல், மார்ச் 18- கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில், மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட வன அலுவலரான கா.ராஜாங்கம், தருமபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி நாமக்கல் மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்றார். இந் நிலையில், ஞாயிறன்று கொல்லிமலை வந்த அவர், ஆகாய கங்கை அருவி பகுதியை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள சிறுவர் பூங்கா, செம்மேடு அருகே சீக்குப்பாறைப்பட்டி காட்சிமுனை பகுதிக்குச் சென்றார். அங்கு நடைபெறும் கண்காணிப்பு கோபுர பணிகளைப் பாா்வையிட்டார். இந்த ஆய்வின்போது, கொல்லிமலை வனச்சரகர் சுகுமார் மற்றும் வனக்காப்பாளர் கள் கலந்து கொண்டனர்.
குஷ்பு மீது பென்னாகரத்தில் புகார்
குஷ்பு மீது பென்னாகரத்தில் புகார் தருமபுரி, மார்ச் 18- மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு கருத்துக ளைப் பரப்பிய பாஜக நிர்வாகி குஷ்பு மீது திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, பெண் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங் கப்படும் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் குறித்து அவதூ றாக தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், தருமபுரி கிழக்கு மாவட்ட மகளிரணி சார்பில், பென்னாகரம் காவல் நிலையத் தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மகளிர் அணி துணை அமைப்பாளர் மோகனா முனியப்பன், மாவட்ட சமூக வலைதள அணி பொறுப்பாளர் மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து
கரும்பு லாரி கவிழ்ந்து விபத்து ஈரோடு, மார்ச் 18- கடம்பூர் அருகே தனி யார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. ஈரோடு மாவட்டம், கடம் பூரை அடுத்த கோட்டமாளத் தில் இருந்து சத்தியமங்க லத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை அந்தியூர் பகுதி யைச் சேர்ந்த மணிகண்டன் (45) என்பவர் ஓட்டிச் சென் றார். அந்த லாரியில் கடம் பூர் அருகே உள்ள அணைக் கரை கிணத்துதொட்டி பகு தியைச் சேர்ந்த 5 பெண்கள் வந்ததாக சொல்லப்படுகி றது. இந்நிலையில், கோட்ட மாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் ஓட்டு நர் உள்பட 5 பெண்களும் காயம் அடைந்தனர். உடனடி யாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த னர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மோடியின் குடும்பத்தில் மணிப்பூர் மக்கள் இல்லையா?
திருப்பூர், மார்ச் 18- பாஜக ஆளும் மணிப்பூர் மோடியின் குடும்பத்தில் உள்ளதா? இல்லையா? பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களை ஏன் சந்திக்கவில்லை என்பதை மோடி கூற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முரு கன் கூறினார். கேத்தம்பாளையம் தியாகி ஆர்.பன்னீர் செல்வத்தின் 26ஆம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் போயம்பாளையம் பிரிவில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெறும் தேர்தலாக கருதக் கூடாது. இந்த தேசத்தின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக கருத வேண்டும். 2024 தேர்தலில் 10 ஆண்டு சாத னைகளை கூறி வாக்கு கேட்பதற்கு மாறாக 2047இல் இந்தியா வல்லரசாகும் என்று கூறி வாக்கு கேட்கிறார். ஏனெனில் அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. மாறாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையையும் பல மடங்கு உயர்த்தி விட்டார்கள். இதையெல்லாம் திசை திருப்பவே வெறுப்பு அரசியலை முன்வைத்து, ஒரு புறம் மக்களை மதவாத அடிப்படையில் பிரித்துவிட்டு, மறுபுறம் பொதுத்துறை நிறு வனங்களை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்து வருகிறார் கள். துறைமுகம், விமான நிலையம் உள் ளிட்ட அனைத்தும் விற்கப்பட்டு வருகிறது. இங்கு போதைப் பொருள் குறித்து பேசு கிறார்கள். அவர்கள் ஆளும் குஜராத்தில் 2014க்கு முன்பு வரை 600 கோடி மதிப்பி லான போதை பொருட்கள் கைப்பற்றப்பட் டது. ஆனால் 2014க்கு பிறகு மட்டும் இதுவரை 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள் ளது. குறிப்பாக அதானிக்கு சொந்தமான துறைமுகத்திலிருந்து பெறுமளவில் கைப் பற்றப்பட்டு உள்ளது. ஊழலை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் தேர்தல் பத்திரத்தை கொண்டு வந் தார்கள். அது எவ்வளவு பெரிய ஊழல் என் பதை உச்ச நீதிமன்றம் இப்போது சுட்டிக் காட்டி இருக்கிறது. இதுவரை ரூ.25 லட்சம் கோடி கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய் துள்ளனர். டெல்லியில் போராடிய விவசாயி களுக்கு அளித்த வாக்குறுதிப்படி விவசாய கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். மத்திய அமைப்பான சிஐஜி ரூ.7.5 லட்சம் கோடிஊழல் நடந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. 140 கோடி மக்க ளும் மோடியின்குடும்பம் என்று கூறுப வர்கள், கலவரங்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் மணிப்பூர் மக்களை ஏன் சந் திக்கவில்லை. அவர்கள்மோடியின் குடும் ம்பம் இல்லையா? தில்லியில் போராடிவ ரும் விவசாயிகள் மோடியின் குடும்பம் இல்லையா? வரும் தேர்தலில் மக்கள் உங் களை தோற்கடிப்பார்கள். இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும், என்றார்.
விடுதியில் சுகாதாரமற்ற குடிநீர் அமிர்தா பல்கலை., மாணவர்கள் போராட்டம்
கோவை, மார்ச் 18- கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா நிகர்நிலை பல்கலைகழக விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருப்ப தாகக்கூறி கல்லூரி வளாகத்தில் மாணவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், தமிழக - கேரள எல்லைப்பகுதியான எட்டிமடை பகுதியில் அமிர்தா நிகர்நிலை பல்கலைகழகம் செயல் பட்டு வருகின்றது. இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக் கான மாணவர்கள் தங்கி படித்து வருகின்ற னர். விடுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயின்று வரும் நிலையில், மாணவர்களுக்கு தரமற்ற குடி நீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப் படுகிறது. இதுகுறித்து, மாணவர்கள் பல முறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித் தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து அவேசம டைந்த மாணவர்கள் ஞாயிறன்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுத்தமான குடி நீர் வழங்கப்படும் வரை போராட்டம் தொட ரும் என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாண வர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்தால் பல்கலைகழக வளாகத் தில் பரபரப்பான சூழல் நிலவியது.
கள்ளக்கிணறு 4 பேர் படுகொலை வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் தொடர் விசாரணை
கள்ளக்கிணறு 4 பேர் படுகொலை வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் தொடர் விசாரணை திருப்பூர், மார்ச் 18 - பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக் கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கி யது. 22 ஆம் தேதி வரை தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று நீதித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிரா மத்தில் வசித்து வந்த செந்தில்குமார், மோகன்ராஜ், ரத்தினம் மாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் தங்களது வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதற்காக கோரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, ஐயப்பன், குட்டி என்கின்ற வெங்கடேஷ், சோனை முத்தையா செல்வம், மற்றும் இவர்களுக்கு அடைக் கலம் கொடுத்த வெங்கடேஷ் என 6 பேரை காவல்துறையி னர் கைது செய்தனர். மேலும் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்கடேஷ் என்பவனை போலீசார் கால் முட்டி யில் சுட்டுப் பிடித்தனர். குட்டி என்கின்ற வெங்கடேஷ் கோவை யில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசா ரித்த காவல் துறையினர் 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற் றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் திங்களன்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொலை குற்றவாளிகள் ஆறு பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர். மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்பு வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கு திங்கள் முதல் வரும் 22ஆம் தேதி வரை தொடர் விசாரணை வழக்காக எடுத்து கொள்ளப்பட்டு விசாரிக்கபட உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் கனகசபாபதி ஆஜரானார்.
விஜயா பதிப்பக விருதுகள் அறிவிப்பு
விஜயா பதிப்பக விருதுகள் அறிவிப்பு கோவை, மார்ச் 18- விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜயா பதிப்பக நிறுவனர் வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினத்தையொட்டி விஜயா பதிப்பகம் சார்பில் ஆண்டுதோறும், ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித்தன் ஆகிய எழுத்தாளுமைகளின் பெயரால் விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர சிறந்த விற்பனையாளருக்கு வானதி விருதும், சிறந்த நூலகருக்கு சக்தி வைகோ.விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, 2024 ஆம் ஆண்டுக்கான விஜயா வாசகர் வட்ட விருதுகளுக்கான எழுத்தாளர்களை தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி ஜெயகாந்தன் விரு துக்கு எழுத்தாளர் எஸ்.சங்கரநாரயணன், புதுமைபித்தன் விருதுக்கு எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன், மீரா விரு துக்கு கவிஞர் மா.ஸ்டாலின் சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று, சிறந்த புத்தக விற்பனையாளருக்கான வானதி விருது, கும்பகோணம், ஸ்ரீ மார்க்கண்டேயா புக் லேரி ஜே.கல்யாணசுந்தரத்திற்கும், சிறந்த நூலகருக்கான சக்தி வைகோ விருது சென்னை முழுநேர அரசு கிளைநூல கத்தின் இரண்டாம்நிலை நூலகர் பா.பேனிக்பாண்டிய னுக்கும் வழங்கப்படுவதாக, தெரிவித்துள்ளார்.
சேலத்திற்கு பிரதமர் மோடி இன்று வருகை
சேலம், மார்ச் 18- பிரதமர் மோடி சேலம் வருகையையொட்டி, மாவட்ட காவல் எல்லையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (இன்று) சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பிரதமரின் சேலம் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, சேலம் மாவட்ட காவல் எல்லையில், எவ்வித ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ரூ.22 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி
ஈரோட்டில் ரூ.22 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி ஈரோடு, மார்ச் 18- ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக் கும் பறக்கும் படை குழுக்கள் 3, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 3, வீடியோ கண்காணிப்புக்குழு 1, வீடியோ பார்க்கும் குழு 1, கணக்குகள் தணிக்கைக் குழு 1 என 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் 144 குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் கூடுதலாக ஒரு குழு என்ற அடிப்படையில் 725 அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.8 லட்சத்து 82 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.7 லட்சத்து 37ஆயிரமும், பெருந்துறை தொகுதியில் ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 650ம், பவானியில் 85 ஆயிரம், பவானிசாகரில் ஒரு லட்சத்து 95 ஆயிரம் என்ற அடிப் படையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.22 லட்சத்து 42 ஆயிரத்து 720 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது.
மயான பொதுப்பாதையை மீட்டுத்தர வலியுறுத்தல்
நாமக்கல், மார்ச் 18- மயான பொதுப்பாதையை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள புகார் மனுபெட்டியில், தமிழ் புலிகள் கட்சி யின் மாவட்ட துணைச்செயலாளர் குமரவேல் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது, ராசிபுரம் வட்டம், மோளப்பாளை யம் ஊராட்சி மற்றும் வருவாய் கிரா மத்திற்குட்பட்ட, பழனியப்பனூரில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மயானத்திற்கு செல்லும் பாதையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு, அப்ப குதியைச் சேர்ந்த விவசாய நில உரிமையா ளர்கள் அனைவரும் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்து, பாதை முழுவதும் விவசாய நிலத்து டன் சேர்த்து விவசாயம் செய்து வருகின்ற னர். இதனிடையே, பழனியப்பனூரில் யாரே னும் இறந்தால் அவர்களுடைய உடலை பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு மிகவும் சிரமப்பட்டு சாதியவாதிகளுக்கு பயந்து, புதர் மண்டிய வரப்புகள் மேல் தற்போது வரை எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த ஒரு முதியவர் இறந்துவிட்ட நிலை யில், மயான பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் உள் ளிட்டோருக்கு பலமுறை புகார் மனு அளித் ததும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. எனவே, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பட்டியலின மக்களின் நலன் கருதி துரித மான நடவடிக்கை மேற்கொண்டு மயான பொதுப்பாதையை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல் சேலம், மார்ச் 18- காடையாம்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளை விரைந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கள், திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டி ருந்த பெட்டியில் மனுக்களை போட்டனர். இதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் 12 சாயப்பட்ட றைகள் செயல்பட்டு வருகின்றன. சாயப்பட்டறைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரால், எங்கள் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரும் மாசு கலந்து வருவதால் குடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. நிலத்தடி நீர் மாசடைந் திருப்பதால் விவசாயத்திற்கு நீர் இல்லாமல் தவித்து வரு கிறோம். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் புகார் தெரிவித்த போது, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.