districts

தமிழ் சமூக வரலாற்று பெருமையை “கீழடி” நமக்கு உணர்த்தி இருக்கிறது

தருமபுரி, டிச.26- தமிழ் சமூக வரலாற்று பெருமையை கீழடி உணர்த்தியுள்ளது என தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பெருமி தம் தெரிவித்துள்ளார். தகடூர் புத்தக பேரவையின் சார்பில் நடை பெற்று வரும் 3 நாள் நிகழ்வு கருத்தரங்கம் தருமபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திரு மண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு தொல்லியல துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநர் தி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தகடூர் புத்தகபே ரவை பொருளாளர்‌ எம்.கார்த்திகேயன் வர வேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ‘தமிழனின் பெருமை’ என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ் ணன் பேசியதாவது, தமிழ் சமூகம் வரலாற் றுப் பெருமையை நமக்கு கீழடி உணர்த்தி இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் வட மாநிலங்களில் அதிக தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் குறிப்பிடும் படி யாக மேற்கொள்ளப்படவில்லை. தொல்லி யல் ஆய்வுகள் மூலமாகத்தான், நமது வர லாற்றை நாம் அறிய முடியும். இந்த ஆய்வு களை அறிவியல் பூர்வமாக மேற்கொள் ளும் போது அதற்கான தரவுகள் கிடைக் கும். அவ்வாறு கிடைக்கின்ற தரவுகளைக் கொண்டு நமது வரலாற்றை எடுத்துரைக் கும்போது அதனை உலகம் ஏற்றுக்கொள் ளும். நாம் வேதகால நாகரிகம் தொடங்கி  அதற்கு முந்தைய மற்றும் தற்போது வரை யிலான நமது வரலாற்று ஆதாரங்களை தொல்லியல் அகழாய்வு மூலமாகத்தான் நாம் அறிந்திருக்கிறோம்.

 சங்க இலக்கியமான பரிபாடலில் வைகை நதி குறித்தும், அதன் தொன்மை குறித்தும் ஏராளமாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த நதிக்கரை அருகில் அக ழாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவெடுத்து தோண்டப்பட்ட இடம்  தான் கீழடி. அங்கு எனது ஆராய்ச்சி மாண வர்களோடு சுமார் இரண்டு ஆண்டுகாலம் அகழாய்வு மேற்கொண்டதில் பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை நமது தொன்மை குறித்தும், நமது வாழ்வி யல் காலம் குறித்தும் எடுத்துரைக்கின்றன. ஆகவே, தமிழகத்தில் உள்ள தொல்லியல் அடையாளங்களையும், எச்சங்களையும் பாதுகாத்து அதன் மூலம் வருங்காலத் தலை முறையினர் வரலாற்றை அறியச்செய்ய நாம் பணியாற்ற வேண்டும். தருமபுரி உட்பட தமிழகத்தில் இன்னும் அதிக அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தகடூர் புத் தகப்பேரவை தலைவர் இரா.சிசுபாலன், செயலாளர் இரா.செந்தில், ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் சி.ராஜசேக ரன், புத்தகபேரவை நிர்வாகிகள், பேராசிரி யர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.