ஏப்.23 உலக புத்தக தினம்: திருப்பூரில் இரு நாட்கள் 25 சதவிகித தள்ளுபடி விலையில் புத்தக விற்பனை
திருப்பூர், ஏப்.21– ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருப்பூரில் ஏப். 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் 25 சதவிகிதம் தள்ளுபடி விலையில் புத்தக விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தக தினம் திருப்பூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பின்னல் புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புத்தக தின விழாவை கொண்டாட தீர்மா னித்துள்ளன. அதன்படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை அடுத்த, மங்கலம் சாலையில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்ட ரில் ஏப்.22, 23 சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் சலுகை விலையில் புத்தக விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாட் களும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தக விற்பனையில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தகங்கள் அறிவின் வாசல்களாகத் திகழ்கின்றன. உலக புத்தக தினத்தில் அனைவரும் புத்தகங்கள் வாசிப் போம் என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் இந்த சிறப்பு விற் பனை இயக்கத்தில் புத்தக ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு பொது மக்களும் பங்கேற்று புத்தகங்கள் வாங்கிப் படிக்கும்படியும், குழந்தைகள், சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் படியும் பின்னல் புத்தகாலயம் பொறுப்பாளர் பா.சௌந்தர பாண்டியன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தேர்த்திருவிழாவுக்கு அருந்ததியர் மடத்தில் நீர் மோர் விநியோகம்
அவிநாசி, ஏப்.21 - அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அருந்த தியர் மடத்தில் தேர்த்திருவிழாவின் போது, நீர் மோர் வழங்கு வது என வியாழனன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அவிநாசி வட்டார பகுதியில் வசித்து வரும் அருந்ததியர் மக்கள் பயன்பாட்டிற்காக அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே சமூக மடம் உள்ளது. இந்த மடத்தில் அவிநாசி கோயில் தேர்த்திருவிழாவின்போது, நீர் மோர் கொடுப்பது தொடர் பாக நீண்ட நாட்களாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறு பாடு இருந்தது. மேலும், மடத்தின் சாவி அவிநாசி வருவாய்த் துறையினர் பொறுப்பில் இருந்து வந்தது. இதனால் வியாழ னன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அமைதியான முறை யில் ஒற்றுமையுடன் நீர் மோர் வழங்குவது என முடிவு செய்யப் பட்டது.
இடுவாய், வள்ளுவர் நகர் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை
திருப்பூர், ஏப்.21 - திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி, வள்ளுவர் நகரில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கு மாறு இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினரும், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.கணே சன், வள்ளுவர் நகர் மக்களுடன் வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தார். இடுவாய் ஊராட்சி வள்ளுவர் நகர் பகுதியில் 176/1 பி காலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டிக் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு, அவர்கள் குடியி ருக்கும் இடத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று திருப்பூர் தனி வட்டாட்சியரிடமும், 2022 மே 6அன்று மாவட்ட ஆட்சிய ரிடமும் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். வீட்டுமனை பட்டா இல்லாததால் அவர்கள் குடியிருப்புக்கு மின் வசதி, வீட்டுக் குடிநீர் இணைப்பு பெற முடியாமல், குழந் தைகளுடன் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக கே.கணேசன் கூறியுள் ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆவன செய்வதாக தெரி வித்தார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:29.07/60அடி நீர்வரத்து:380கன அடி
வெளியேற்றம்:264கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:54.43/90அடி.நீர்வரத்து:கனஅடி
வெளியேற்றம்:15கன அடி
முத்துச்செட்டிபாளையத்தில் மீண்டும் அஞ்சலகம்
அவிநாசி, ஏப்.21- முத்துசெட்டிபாளையத்தில் அஞ்சலகத்தை தலைமை தபால் நிலையத்தோடு இணைக்கக்கூடாது என்ற அவிநாசி சமூக அமைப்பினர் கோரிக்கையை ஏற்று, மீண்டும் அஞ்சல கம் செயல்பட தபால் துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ள னர்.
தொழிலாளர் விரோத சட்டத்தை கைவிடுக ஏப். 24-ல் ஆர்ப்பாட்டம்: சிஐடியு முடிவு
திருப்பூர், ஏப்.21 - தமிழ்நாடு அரசு தொழிலாளர் சட்டத்தில்65 ஏ பிரிவில் 12 மணி நேர வேலைக்கு வழிவகுக்கும் பிற்போக்கான முடிவை கைவிட வலியுறுத்தி ஏப்.24 ஆம் தேதி திருப்பூர் மாநக ராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) முடிவு செய்துள் ளது. சிஐடியு மாவட்டக்குழுக் கூட்டம் அண்மையில் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் 24ஆம் தேதி திங்களன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தைக் கைவிட வலியுறுத்தி பெருந்திரளான தொழிலாளர்களைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று தீர்மானிக்கப்பட்டதாக சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் தெரிவித்தார்.
பாலக்கோடு பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சம்
தருமபுரி, ஏப்.21- பாலக்கோடுக்குட்பட்ட பகுதிகளில் உலா வரும் 2 காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங் களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர் நிகழ்வாக, ஒரு காட்டு யானை கம்பைநல்லூர் அருகே ஏரிக்கரையில் ஏறும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, இரண்டு காட்டு யானைகள், வனப்பகுதியிலிருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி பாலக்கோடு வனப்பகுதியையொட்டி உள்ள கும்மனூர், சூடனூர், பஞ்சபள்ளி பகுதியில் சுற்றி வருகின்றன. சூடனூர் பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகளை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து நகர்வை கண் காணித்து வருகின்றனர். கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்கிய படுகாயமடைந்தார். இந் நிலையில், காட்டு யானைகள் பாலக்கோடு பகுதியில் சுற்றி வருவது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாதையில் சாயும் மூங்கில்களால் விபத்து அபாயம்
நாமக்கல், ஏப்.21- கொல்லிமலை பிரதான மலைப்பாதையில், மூங்கில் மரங்கள் சாய்வதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக் கப்பட்டு, விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு செல்ல, அடிவார பகுதியான காரவள்ளி யில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பிரதான மலைப்பாதை உள்ளது. காரவள்ளி வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து சுமார் 10 கொண்டை ஊசி வளைவுகள் வரை சாலைகளின் இரு மடங்கிலும் மூங்கில் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. வயது முதிர்வால் சுட்டெ ரிக்கும் வெயிலுக்கு அடியோடு காய்ந்து வருவதால் டெண்டர் விடப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் வேகமாக காற்று அடிக்கும் போது, பிரதான சாலை யில் சாய்ந்து விழுகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், வியாழனன்று 4 ஆவது கொண்டை ஊசி வளைவில், ஒரு மூங்கில் மரம் பலத்த காற்றுக்கு சாலையில் சரிந்து விழுந்தது. இதுகுறித்த தகவ லின்பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் கொண்டு சாய்ந்த மூங்கில் மரங்களை அப்புறப்படுத்தினர். இருந்தபோதிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மலைச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கொல்லிமலையைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கொல்லிமலை பிரதான சாலையோரத்தில் உள்ள மூங்கில் மரங்கள், அடிக்கடி சாலையில் சாய்ந்து விழு வதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வரும் நாட் களில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி, சாலைகளின் இருபுறமும் உள்ள மூங்கில் மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும். வனப்பகுதிக்குள் மூங்கில் மரங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
“ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தால் பயனில்லை” குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
நாமக்கல், ஏப்.21- ராசிபுரம் அருகே ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தும் குடிநீர் வழங்கப்படாத நிலையில், அப் பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சிக்குட்பட்ட தெற்குப்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 3 மற்றும் 4 ஆவது வார்டுக்குட்பட்ட பொது மக்கள் குடிநீர் பிரச்சனை காரணமாக தொடர்ந்து பல மாதங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். கடந்த ஓரிரு மாத மாக குடிநீர் பிரச்சனை அதிகரித்துள்ள நிலை யில், இதுகுறித்து பலமுறை அதிகாரியி டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலை யில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வீடு குழாய் அமைப்பதற்காக தலா ரூ.5 ஆயிரம் ஒரு வீட்டிற்கு பொதுமக்கள் கொடுத் ததாக கூறப்படுகிறது. இதற்கு உரிய ரசீதும் வழங்கப்படவில்லை என்ற நிலையிலும், தண்ணீர் இதுவரை வரவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் காலிக்குடங் களுடன் 100க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த காவல் துறையினர், குடிநீர் பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில், பொதுமக்கள் அனைவரும் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது.
லஞ்சம் கொடுக்காததால் விவசாயிகள் மீது பொய் வழக்கு
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
உடுமலை, ஏப்.21- திருப்பூர் மாவட்டம், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மைவாடி கிளை கால்வாய் மூலம் பாசன வசதி பெற்று வரும் விவசாயி நடராஜ் மீது வேண்டு மென்று, பாசன சபை தலைவர் செல்ல முத்து மற்றும் உடுமலை கால்வாய் உதவி செயற்பொறியாளர் விஜய் சேகரன் ஆகி யோர் தண்ணீர் எடுக்காத நிலையில், வேண்டு மென்றே தண்ணீர் எடுத்தது போல் புகைப் படம் எடுத்து, ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாக கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்காத நிலையில் தற்போது விவசாயி நடராஜ் உட்பட நான்கு பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார் தெரி வித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத் தில் விவசாயிகள் மாதந்தோறும் கொடுக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை. சம்பந்தப்பட்ட முக்கிய அதி காரிகள் யாரும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை.விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட வனத்துறையிடம் தகவல் தெரிவித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விவசாயிகள் கூட்டத் தில் தெரிவித்தனர்.
தீ விபத்து
கோவை, ஏப்.21- கோவை மாவட்டம், காந்திபுரம் அருகே உள்ள படேல் சாலையில் தனியார் பர்னிச்சர் நிறுவனத்திற்கு சொந்தமான மரக்குடோனில் திடீரென தீ விபத்து ஏற் பட்டு, தீ மளமளவென பற்றி எரிந்தது. மூன்று தீயணைப்பு துறை வாகனங்கள், இரண்டு அவசர ஊர்தி வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைத்தனர். விபத்துக்கு மின்கசிவு காரணமா? என்பது குறித்து காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை தீயணைப்பு துறை காவலர்கள் கட்டுக்குள் கொண்ட வந்தனர்.
கிராவல் மண் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
சேலம், ஏப்.21- ஓமலூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்த பயன்படுத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனங் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம் பட்டி பகுதியில் கட்டுமானத்திற்கு தேவைப்படும் கிராவல் மண் கடத்துவதாக சேலம் மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கனிமவளத்துறை புவியியல் உதவி அலுவலர் பிரசாந்த் மற் றும் அதிகாரிகள் தொளசம்பட்டி பகுதியில் சோதனை மேற் கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தாண்டவனூரை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து, மண் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொளசம்பட்டி காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். மேலும், உதவி அலுவலர் பிரசாந்த் கொடுத்த புகாரின்பேரில், மானத்தாள் கிராமத்தைச் சேர்ந்த சித்துராஜ் (38), உப்பாரப்பட்டியை சேர்ந்த விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.
முகநூல் மூலமாக பழகி பண மோசடி
கோவை, ஏப்.21- கோவை, கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் வடி வேல் (54). மெக்கானிக்கல் டிசைன் என்ஜீனியர். இவருக்கு முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் செந்தில் வடிவேலுவிடம் ஆன்லைன் முதலீடு செய்தால் நல்ல வரு மானம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். முதலீட்டுக்கான பணத்தை அந்த நபரிடம் கேட்டபோது அவர் கொடுக்கவில்லை. இத னால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில் வடிவேலு கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகா ரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையத்தில் குறைதீர் கூட்டம்
தருமபுரி, ஏப்.21- தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில், காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை யில், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தீர்க்க முடி யாத வழக்குகளை சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக அழைத்து நேரடியாக காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவ லர்கள் முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடை பெற்றது. இதில் மொத்தம் 117 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 90 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இந்த குறை தீர்க்கும் முகாமில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்களும் உதவியாளர்களும் கலந்து கொண்ட னர்.
மருத்துவ இடம் வாங்கி தருவதாக மோசடி
கோவை, ஏப்.21- திருப்பூர் மாவட்டம், பல்லடம், நாராயணபுரத்தை சேர்ந்த வர் தனசெல்வன் (57). இவர் சிஎல்ஆர்ஐ, நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மகனை மருத்துவருக்கு படிக்க வைக்க விரும்பினார். அப் போது, கோவையை சேர்ந்த பிர்தோஷ், சலாவுதீன் ஆகியோ ரின் அறிமுகம் தனசெல்வனுக்கு கிடைத்தது. அப்போது இரு வரும் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் உங்கள் மக னுக்கு எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.23.50 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ள னர். இதை நம்பிய, தனசெல்வன் அவர்களிடம் ரூ.23.50 லட் சத்தை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், பணத்தை பெற்ற பின்பு, தனசெல்வனின் மகனுக்கு அவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்க கல்லூரியில் இடம் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லை. தனசெல்வன் தான் கொடுத்த பணத்தை கொடுக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தார். பின்னர் அவர்கள் ரூ.3.50 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மீத முள்ள ரூ.20 லட்சத்தை மோசடி செய்து விட்டனர். இதனால், ஏமாற்றமடைந்த தனசெல்வன் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பிர்தோஷ், சலாவுதீன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
குடும்ப பிரச்சனையை தீர்ப்பதாகக்கூறி சாமியார் கும்பல் பண மோசடி
நாமக்கல், ஏப்.21- ராசிபுரம் அருகே குடும்ப பிரச்சனை தீர்ப்பதாகக்கூறி சொகுசு காரில் வந்த சாமியார் கும்பல் பாத்திரக்கடை உரிமை யாளரிடம் ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்த சம்ப வம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமி பாளையம், வண்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந் திரன் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளாக பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வியாழனன்று சொகுசு காரில் இவரது கடைக்கு சாமியாருடன் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ராஜேந்திரனிடம், “உங்களது குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. அதை நாங்கள் தீர்த்து வைக்கி றோம்” என கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜேந்திரன் சாமி யாரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சாமி யார் தான் திருவண்ணாமலையிலிருந்து வருவதாகவும், தங்க ளது குடும்ப பிரச்சனை தீர்க்க திருவண்ணாமலையில் அன்ன தானம் செய்தால், குடும்ப பிரச்சனை அனைத்தும் தீர்ந்து விடும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி ராஜேந்திரன் குடும் பத்தினர் சாமியாரிடம் ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் கொடுத் துள்ளனர். இதன்பின் சாமியார் சென்ற பின்புதான் ராஜேந்தி ரன் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்து, இதுகுறித்து புதுச் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நடைபெற்ற காவல் துறை விசாரணையில், சாமியாருடன் சொகுசு காரில் வந்த கும்பல் கடைக்கு வந்து தன்னுடைய கஷ்டங்களை தீர்ப்பதாக கூறியதாகவும், வீட் டிற்கு சென்ற பின் சிறிது நேரம் என்ன நடந்தது என்று தெரிய வில்லை எனவும், சாமியார் சென்றபின் சிறிது நேரம் கழித்து தான் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது என கூறி னார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீரில் மூழ்கி பெண் பலி
கோவை, ஏப்.21- கோவை, இருகூரைச் சேர்ந்த கணேசன் என்பவ ரின் மனைவி லட்சுமி (58), தனது வீட்டருகே உள்ள கிணற்றில் நீர் இறைப்பதற் காக மோட்டார் சுவிட்சை சென் றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்ததில், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியா னார். இதுகுறித்து கணேசன் சிங்காநல்லூர் போலீசா ருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த போலீசார், லட் சுமியின் உடலை மீட்டு, வழக் குப்பதிவு செய்து, விசா ரணை நடத்தி வருகின்றனர்.