districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

யானை தாக்கிய மலைவாழ் மக்களுக்கு  உரிய நிவாரணம், தரமான சிகிச்சை

உடுமலை, மே 11- காட்டு யானை தாக்கி சிகிச்சை மேற்கொண்டு வரும் மலை வாழ் மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் தரமான சிகிச்சை  அளிக்க வேண்டும் என மழைவாழ் மக்கள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, உடுமலை வனப்பகுதி மவாடாப்பு மற்றும் காட்டுப்பட்டு பகுதியில் கடந்த  புதனன்று மலைவாழ் மக்கள் தேன் எடுக்க சென்றுள்ளனர். மாவடப்பு வழியாக கொக்கணமலை பகுதியில் ராமன், லட்சும ணன், சிவன்  ஆகிய. மூன்று நபர்கள் தேன் எடுக்க பிரிந்து  சென்ற போது, கூட்டமாக நின்று கொண்டிருந்த யானை கூட் டத்திலிருந்து இரண்டு யானைகள் பிரிந்து மூவரையும் தாக்கி  உள்ளது. இதில், லட்சுமணன் (42 ) என்பவருக்கு  கால் பகுதி  இடுப்பு  பகுதியில் காயம் மற்றும் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து, உடனடியாக அங்கு வந்த மழைவாழ் மக்கள் யானையை விரட்டி விட்டு டோலி கட்டி தூக்கி  வந்து வேட்டனூர் ஆலுவா மருத்துவமனையில்  சிகிச்சைக் காக சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். வனப்பகுதியில் வறட்சி எற்பட்டு உள்ளதால் வனவிலங்குகள் உணவு மற்றும்  தண்ணீர் பருக மலைவாழ் மக்கள் குடியிருப்புக்களுக்கு வருவது அதிகமாக உள்ளது. மேலும் வனவிலங்குகள் மக் களை தாக்கினால் மருந்துவமணைக்கு கொண்டு வர சாலை  வசதிகள் இல்லை. புதியசாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி யும் உடுமலை வனத்துறை அதிகாரி தடுத்த காரணத்தால் திருமூர்த்திமலையில் இருந்து குருமலை வரை போட  வேண்டிய சாலை வேலை பாதியில் உள்ளது. உடுமலை  வனத்துறை வனக்காவலர் தடுத்த சாலையை உடனடியாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை தாக்குதலுக்கு  உள்ளானவருக்கு உரிய மேல் சிகிச்சையும் நிவாரணமும் தர  வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

அரை குறை சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

உடுமலை, மே 11- குரல்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக போடப் பட்ட காங்கிரீட் சாலையின் இருபுறமும் சமன் படுத்தாத தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரல்குட்டை ஊராட்சி மலையாண்டிபட்டினத்தில் ஏராளமான குடியிருப்பு கள் உள்ளது. இங்குள்ள கேசிபி நகரில் உள்ள ஆறு வீதி களின் சாலைகளும்  குண்டும்குழியுமாக உள்ளது. இந்நிலையில், அங்குள்ள தெற்கு பகுதியில் அண்ணா  மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இரண்டு வீதிகளுக்கு கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. புதிதாக போடப்பட்ட காங்கிரீட் சாலைகளின் இருபுறமும் உள்ள பள்ளத்தை மண் நிரப்பி சமன்  படுத்தவில்லை. அதனால், இவ்வழியாக வருகிற வாகனங் கள் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. ஒருபுறத்தில் இருந்து  மறுபுறம் வாகனம் வந்தால் வழி விட  முடியாமல், பள்ளத் தில் இறங்க வேண்டிய நிலை உள்ளது. பல நேரங்களில் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உட னடியாக இருபுறமும் பள்ளமாக உள்ளதை சமன் படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காங்கீரீட் சாலை போடப்படாத குண்டும் குழியுமாக  உள்ள வீதிகளிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில்  விரைந்து காங்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.

பில்லூர் அணையை ஆய்வு செய்த தலைமை செயலாளர்

கோவை, மே 11- பில்லூர் அணையின் நீர் இருப்பு மற்றும்  தூர்வாரும் பணி குறித்து, தமிழ்நாடு அரசின்  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அதி காரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற் கொண்டார். பில்லூர் அணை நீரை ஆதாரமாக கொண்டு கோவை மாநகராட்சி மற்றும் இதன்  புறநகர் பகுதிகள் மட்டுமின்றி திருப்பூர் மாவட்டத்திற்கும் பல்வேறு கூட்டு குடிநீர் திட் டங்கள் செயல்பாட்டில் உள்ளது. சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு விட்ட நிலையில்,  கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பில்லூர் அணையே பூர்த்தி  செய்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு  அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ்  மீனா வெள்ளியன்று பில்லூர் அணையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும்  நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களி டம் கேட்டறிந்தார். மேலும், அணையினை தூர்வாருதல் பணியினை துரிதப்படுத்தி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங் கினார். இந்நிகழ்வின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு  பிரபாகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

காய்ந்த தென்னை மரங்களை அகற்ற நிவாரணம் 

காய்ந்த தென்னை மரங்களை அகற்ற நிவாரணம்  உடுமலை, மே. 11- காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற விவசாயிக ளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதிகளில் பல ஆயிரக்க ணக்காண ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய் யப்பட்டு இருந்தது. இதன் மூலம் கணிசமான வருமா னத்தை விவசாயிகள் பெற்று வந்தனர். தற்போது, பருவ  மழை இல்லாமல் போனதால், தண்ணீரை விலைக்கு வாங்கி  ஊற்ற முடியாமல் ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்து போயுள்ளது. காய்ந்த மரங்களை முழுமையாக அகற்ற  சில ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.  இந்த தொகையை திரட்ட முடியாத நிலையில் விவசாய  நிலங்களிலேயே அகற்றப்படாத தென்னை மரங்கள் உள் ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பருவ மழையால்  காயந்து போன தென்னை மரங்களை அகற்ற சில ஆயிரம்  செலவு ஏற்படுகிறது. முன்பு செங்கல் சூலை உரிமையா ளர்கள் காய்ந்து போன மரங்களை எடுத்து சென்றார்கள். ஆனால், பல புதிய தொழில் நுட்பங்கள் செங்கல் சூலைக்கு  வந்ததால் மரங்களை எடுக்க யாரும் வருவது இல்லை. இத னால் மரங்களை எங்களால் அகற்ற முடியவில்லை. இத னால், நிலங்களில் காய்ந்த தென்னை மரங்கள் கிடப்ப தால் விவசாயம் எதுவும் செய்யா முடியாமல் இருக்கிறோம். தமிழக அரசு காய்ந்து போன தென்னை மரங்களை அகற்ற உரிய நிவாரணம் தர வேண்டும் என்றனர்.