districts

img

போக்சோவில் கைது செய்யப்படுவோருக்கு உரிய தண்டனை

கோவை, டிச.31- போக்சோ சட்டத்தின் கீழ் கைது  செய்யப்படுவோருக்கு உரிய தண் டனை பெற்று தரப்படும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் செய்தி யாளர்களிடம் கூறுகையில், குட்கா, புகையிலை, கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்படும் போது, அதனை அவர் களுக்கு விற்பனை செய்த மொத்த விற் பனையாளர்களையும் கைது செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் காவல்துறை சார்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும், பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது,  என்றார்.