தருமபுரி, மே 17- ஜெய்பீம் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் அறக்கட்டளை சார்பில், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. கம்பைநல்லூரில் சந்தைபேட்டை சமூதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு அ.மாதேஸ்வரன் தலைமை ஏற்றார். அறக்கட்டளை நிர்வாகி சே.ஹானஸ்ட்ராஜ் வரவேற்றார். வி. கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இதில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்க ளுக்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் க.விஜயதேவன் பரிசுகளை வழங்கி மாணவர்கள் மேற்படிப்பு படிக்க ஆலோசனை வழங்கினார். நீதிபதி க.ஆனந்தன் சிறப்பு ரையாற்றினார். இதில், தலைமை ஆசிரியர் கு.மனோஜ்குமார், எம்.குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மோகன்தாஸ், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ச.கிருஷ்ணன், பேராசிரி யர் நடேசன், ஆசிரியர் அம்பேத்கர், குப்புராஜ், அறக்கட்டளை நிர்வாகிகள் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.