திருப்பூர் மார்ச் 20 – திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் கவிதாலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்க ளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் விந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் வீரய்யா மற்றும் யோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆலோ சகர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவ லர் சாருக்கான் வரவேற்றார். இவ்விழாவில், இந்த கல்வியாண்டில் கல்வி செயல்பாடு மற்றும் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் வீரய்யாவின் அறிவியல் அற்புதங்கள் (மேஜிக் ஷோ), பாரம்பரியம்மிக்க பொன்மண் கலைக்குழுவின் இசை விருந்து மற்றும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி என பெற்றோர்களின் பங்கேற்புடன் விழா நடைபெற்றது.