districts

சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டு பத்திரம்

திருப்பூர், ஆக. 22 - ஜனவரி 24, தேசிய பெண் குழந்தைகள் தின விழாவின் போது தமிழக அரசால் 2023-24ஆம் ஆண்டிற்கு பெண் குழந் தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய  பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.1 லட் சத்திற்கான காசோலை வழங்கப்படுவதாக ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இவ்விருதிற்கு பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உத வுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திரு மணத்தை தடுத்தல், சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள்  மற்றும் அவை தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள்  மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறப்புடன் செயல் புரிந்தோர் தகுதி உடை யவர்கள் ஆவர். 13 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட தமிழகத்தைச் சார்ந்த  பெண் குழந்தைகளின் பெயர், முகவரி, புகைப்படம், ஆதார்  எண், சாதனைகளின் சான்றுகள் ஆகியவற்றின் ஒருபக்கத் திற்கு மிகாத ஆதாரங்களுடன் முதன்மை கல்வி அலுவலர்,  மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், மாவட்ட விளையாட்டு  அலுவலர், காவல் துறை மற்றும் குழந்தைகள் நலனுக்காக சேவை புரியும் தொண்டு நிறுவனம் ஆகிய ஏதேனும் ஒன்றின்  முன்மொழிவுடன் விண்ணப்பத்தை அக்டோபர் 31க்குள் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட சமூக  நல அலுவலகம், அறை எண்.36-ல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது.