அவிநாசி, பிப்.27- அவிநாசியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், “தமிழ்ச்செம்மல்” விருதாளர் மணிவண்ண னுக்கு பாராட்டு விழா ஞாயிறன்று நடைபெற் றது. “தமிழ்ச்செம்மல்” விருதாளர் மணிவண் ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவி நாசி தமுஎகச தலைவர் ஆசிரியர் இரமேஷ்கு மார் தலைமை வகித்தார். இதில் ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். செயலாளர் தின கரன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில செயற்குழு ஈஸ்வரன், பொறுப்பாளர்கள் சம்பத், ரமேஷ், இராசி புரம் எழுத்தாளர் நாணற்காடன் ஆகியோர் தமிழ்ச்செம்மல் விருதாளர் மணிவண்ண னைப் பாராட்டி பேசினர். வழக்குரைஞர்கள் கோபாலகிருஷ்ணன், விஜய்ஆனந்த், முக மதுரிவ்வாய், “துளிர்கள்” சமூகநல அறக்கட் டளை ஸ்ரீகண்டன், ராஜேஷ்குமார், அறிவியல் இயக்கம் பிரகாஷ், “நல்லது” நண்பர்கள் அறக்கட்டளை ரவிக்குமார், சாய்கண்ணன், ஆசிரியர் மல்லையராஜா ஆகியோர் பல் வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். ஈரோடு நாடகக்கொட்டகை சார்பில் சிரிப்பை தூண்டும் வகையில் தயக்கத்திலி ருந்து விடுதலை, இரயில் பாலத்தில் சரசு, காவேரியின் குமுறல், சில்டா, மெல்டா ஆகிய நான்கு நாடகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளிக்குழந்தைகள் பங்கேற்ற னர். ஆசிரியைகள் பரமேஷ்வரி, சுசீலா ஆகி யோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பொறுப்பாளர் ராஜா நன்றி கூறினார்.