ஈரோடு, ஜூலை 24- கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண் டும் என கணவனை இழந்த பெண்கள் ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, கணவர் இறந்த பிறகு குழந்தைகளுடன் யாரு டைய ஆதரவுமின்றி, கூலி வேலைகளுக்குச் சென்று வருகி றோம். மிகவும் வறிய நிலையில் குடும்பத்தை நடத்த சிரமப்படு கிறோம். நாங்கள் 10 ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படித் துள்ளோம். அத்துடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். மேலும் ஆதர வற்ற விதவை சான்றினையும் பெற்றுள்ளோம். இந்நிலை யில், அரசு நடத்தும் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதும், சுய தொழில் பயிற்சிகளில் பங்கேற்பதும் இயலாத நிலையில் உள்ளோம். எனவே, எங்கள் வறுமை சூழலை கருத்தில் கொண்டு வயது வரம்பின்றி கருணை அடிப் படையில் அரசு வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.