districts

img

பாடம் நடத்துகிற பேராசிரியர்களை நியமித்திடுக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

கோவை, மே 24- கோவை அரசு  கலைக் கல்லூரியில் கடந்த ஆறு மாதங்களாக சரிவர கல்லூ ரிக்கு வராமலும், பாடம் எடுக்காமலும் இருக் கும் உதவிப் பேராசிரியரை மாற்றி, பாடம் நடத்துகிற பேராசிரியரை நியமிக்க வேண் டும் எனக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட் டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரி யில் புவியியல் துறையில் உதவிப் பேராசிரி யராக பணியாற்றி வருபவர் பாத்திமா.  புவி யியல் துறையில் 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலை யில், உதவிப் பேராசிரியர் பாத்திமா கடந்த  6 மாதமாக கல்லூரிக்கு சரவர வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாடங்கள் முழுமையாக நடத்தாததன் காரணமாக தங்களின் கல்வி கேள்விக்குறியாக உள் ளது. ஆகவே, உதவிப் பேராசிரியரை உடன டியாக மாற்ற கோரி மாணவ, மாணவிகள்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், கல்லூரியில் பெண்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் கூட கிடை யாது. ஆகவே, கல்லூரியின் கட்டமைப்பிற் காக ஒதுக்கப்பட்ட நிதிகள் எவ்வாறு செல விடப்படுகிறது என்பது குறித்து உரிய முறை யில் விசாரிக்க வேண்டும்  எனவும் போராட் டத்தின்போது வலியுறுத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரி டம் மனு அளிக்கப்பட்டது. இதன்பின் மாண வர்கள் கூறுகையில், தங்களின் கல்வி கேள் விக்குறியாகி உள்ளதாகவும், வரும் ஜூன்  24 ஆம் தேதி செமஸ்டர் தேர்வு நடக்க  உள்ள நிலையில், விரைந்து உதவிப் பேராசி ரியரை மாற்றி புதிய பேராசிரியரை நியமிக்க  வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அதி காரி, இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல் லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர் கள் கலைந்து சென்றனர்.