districts

img

தாட்கோ கடன் - மலைவாழ் மக்கள் அலைகழிப்பு

தருமபுரி, பிப்.14- தாட்கோ மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்த மலைவாழ்  மக்களை, பல்லவன் கிராம வங்கி நிர்வாகம் அலைகழித்து வருவதாக, மலைவாழ் மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட் பட்ட போதக்காடுபுதுார் கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் சிறு, குறு விவசாயிகளாக உள்னர். இந்நிலையில், இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தி ரன், பழனியம்மாள், கலைச்செல்வி, ராமாயி ஆகியோர் தாட்கோ மூலம் கறவை மாடுகள் வாங்க விண்ணப்பித்துள்ள னர். தாட்கோ அலுவலகத்தின் மூலம் கடன் வழங்க பரிந்துரை  செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இக்கிராம மக்கள் பையர் நத்தம் பல்லவன் கிராம வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து வங்கி அதிகாரிகளும் கடந்த ஒரு வரு டத்திற்கு முன்பே கடன் கேட்ட பயனாளிகளின் சொத்து  மதிப்பீடுகளையும், இவர்களின் வங்கி வரவு கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை கடன் வழங்காமல் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தி வரு கின்றனர். எனவே, கறவை மாட்டுக்கு கடன் வழங்க வேண்டும். மலைவாழ் மக்களை அலைகழிக்கும் வங்கி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி போதக்காடுபுதுார் கிராம மலைவாழ் மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர்.