districts

img

ஆமை வேகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் -உண்ணாவிரதம்

கோவை, டிச.9- ஆமை வேகத்தில் நடைபெறும் அடுக்குமாடி குடியி ருப்பு பணிகளால் வாடாகைக்கு வெளியில் குடியிருக் கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக குற்றம்சாட்டி யும், உடனடியாக பணிகளை விரைந்து முடித்து பயனாளி களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு  நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீட்டு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர்.  கோவை சிவானந்தகாலனி தண்ணீர் தொட்டி அருகே  நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு இச்சங்கத்தின்  நிர்வாகி சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், தமிழக குடிசை மாற்று வாரியம், கடந்த 2018 ஆம் ஆண்டு பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை காலி செய்து, 18 மாதங் களில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி  ஒப்படைக்கிறோம் என உறுதியளித்தனர். இதனையடுத்து, 216 குடும்பங்களை சேர்ந்தவர்கள் காலி செய்தனர். ஆனால் நான்கு வருடங்கள் ஆன பின்னரும் தற்போதுவரையில் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. இதனால், வாடகை விடுகளில் குடியிருக்கும் இம்மக்களின் வரு வாயின் பெரும் பகுதி வாடகைக்கே செல்கிறது.  விரைந்து அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்க  வலியுறுத்தி பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை  விடுத்தும், ஆமை வேகத்திலேயே இப்பணிகள் தொடர் கிறது. விரைவில் பணிகளை முடித்து பயனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தை வாழ்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம்,  மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகிர், இடைக்குழு உறுப்பி னர்கள் மாணிக்கவாசகம், முருகேசன், சுமைப்பணி தொழி லாளர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.ராஜன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.