districts

img

புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

உதகை, ஜூன் 1- கோத்தகிரியில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன் னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.  உலக புகையிலை எதிர்ப்பு தின ஒழிப்பு விழிப்புணர்வு  மாரத்தான் போட்டி கோத்தகிரியில் நடைபெற்றது. கோத்த கிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப் புணர்வு மாரத்தான் போட்டியை கிளப் கிஷோர், ஹில்போர்டு பள்ளி தாளாளர் ரவிக்குமார், ஆக்டிவ் கிட்ஸ் இயக்குநர் சிவன், கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன், போக் குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் ஃபைன்  கோல்டு ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இப்போட்டியானது காமராஜர் சதுக்கத்தில் தொடங்கி மார்க்கெட், பேருந்து நிலையம், காம் பாய் கடை, பாண்டியன் பார்க் பகுதி வரை நடந்தது. அப்போது பொதுமக்களுக்கு புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், சீனியர் மாரத்தான்  ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டன.