திருப்பூர், அக்.7- திருப்பூர் வனச்சரகம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் வன உயிரின வாரத்தை முன்னிட்டு சனியன்று நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டாண்மை என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நஞ்சராயன் பறவைகள் சர ணாலயத்தில் நெகிழி இல்லா பறவைகள் சரணாலய மாக மாற்றுவதற்கு நெகிழி கழிவுகளை அகற்றியும், கலை நிகழ்ச்சி நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்கு மார் முன்னிலை வகித்தார். வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் பேசுகையில், நெகிழி பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அவற்றை பறவைகளும், விலங்குகளும் சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் இறந்து விடுகின்றன. நெகிழியின் நச்சுப் பகுதிகள் கடல் உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்றடைவதால் நெகிழி மனித ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உணவு சங்கிலி கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். நெகிழி உணவு சங்கிலியின் சிறிய உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் .அதுமட்டுமல்லாமல் நமது சந்ததி களையும் பாதிக்கும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட அலகு - 2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் சரணாலயத்தில் இருக்கும் நெகிழி கழிவுகளை அகற்றியும், பொதுமக் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், நெகிழி விழிப்பு ணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.