districts

img

தொழிலாளர் விரோத ஒன்றிய அரசு: அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சாரம்

கோவை, ஜூலை 27- ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை களை அம்பலப்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகு திகளில் அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.  தொழிலாளர் விரோத நான்கு சட் டத் தொகுப்பை திரும்பப்பெற வேண் டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.28  ஆயிரம் வழங்க வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண் டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கை களை முன்வைத்து நாடு முழுவதும் ஜூலை 26 முதல் 30 ஆம் தேதி வரை மத்திய தொழிற்சங்கங்கள் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்துள்ளது. இதன்படி, அனைத்து  தொழிற்சங்கங்கள் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.  இதன்ஒருபகுதியாக, ஒன்றிய மோடி அரசு கடைபிடித்து வரும்  தொழிலாளர் விரோத கொள்கை களை கண்டித்து இப்பிரச்சார இயக் கம் கோவை மாவட்டத்தில் பரவலாக  நடைபெற்றது. புதனன்று கோவை காந்தி பார்க் அருகே துவங்கிய பிரச் சார இயக்கத்தை ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எம்.ஆறுமுகம் துவக்கி வைத்தார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் கே.மனோகரன், ஏஐடியுசி தங்கவேல், எல்பிஎப் நா. தமிழ்செல்வன், ஐஎன்டியுசி பாச மலர், எச்எம்எஸ் டி.எஸ்.ராஜாமணி, எம்எல்எப் மு.தியாகராசன், ஏஐசிசி டியு க.பாலசுப்பிரமணியன், எஸ்டி டியு ரகுபுனிசார், எல்டியுசி மணிகண் டன் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்க தலைவர்கள் கலந்து பங்கேற்று உரையாற்றினர். இப்பிரச்சார இயக் கம் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் ஜூலை  30 ஆம் தேதி வரை நடைபெறும் என  தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்த னர்.