திருப்பூர், மே 2- பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி உற் பத்திக்கு ஆதாரமான பருத்தி நூல் விலை மே மாதம் கிலோவுக்கு ரூ.40 வீதம் கடுமை யாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மே 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஆறு நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று அனைத்து தொழில் அமைப்புகள், தொழிற் சங்கங்கள் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. பருத்தி நூல் விலை மாதந்தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்படுவது வழக் கம். அதன்படி மே மாதத்திற்கான விலை மே 2ஆம் தேதி திங்களன்று அறிவிக்கப் பட்டது. அதில் அனைத்து ரக பருத்தி நூல் களும் கிலோ ரூ.40 அளவுக்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம் வகை வாரியாக ஒரு கிலோ நூல் ரூ.400 முதல் ரூ.470 வரை விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு திருப்பூரில் கடும் அதிர் வலையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியா ளர் சங்கம் (டீமா) முன் முயற்சியில் திங்க ளன்று மாலை காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அனைத்து உற்பத்தியா ளர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க நிர் வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டது. இதில் நூல் விலை உயர்வு பிரச்ச னையில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க் கும் வகையில் வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பின ரும் தங்கள் கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து மே 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி முடிய ஆறு நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவ தென்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் பனியன் நிறு வனங்கள் மட்டும் அல்லாது அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும் ஈடுபட போவ தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக நூல் விலை உயர்வைக் கட் டுப்படுத்த, இந்தியாவில் உள்ள ஜவுளி உற் பத்தி நிறுவனங்களின் தேவைக்கு போக மீதம் இருக்கும் பஞ்சு மற்றும் நூலை மட் டும் தான் ஏற்றுமதி செய்ய வேண்டும், பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை அத்தியாவசிய தேவை பட்டியலுக்கு கொண்டு வந்து பதுக் கலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என வும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய அரசு 11 சதவிகிதம் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தொழில் துறையினர் ஆரம்பத்தில் இருந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தக்க சமயத்தில் முடிவெடுக்காமல் ஒன்றிய அரசு காலதாமதம் செய்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இறக்குமதி வரியை செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைப்பதாகக் கூறியது. ஆனால் இறக்குமதி வரியை நீக்கினாலும், பருத்தி, நூல் விலை யைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப் பாக வெளிநாட்டிலும் பருத்தி விலை கடுமை யாக உயர்ந்து விட்ட நிலையில், இறக்குமதி வரி 11 சதவிகிதத்தை நீக்கினாலும், அங்கி ருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி விலையும் அதிகமாகவே இருக்கிறது. அத் துடன் வெளிநாட்டு பஞ்சை கொண்டு வருவ தற்கான கண்டெய்னரும் தட்டுப்பாடாக உள்ளது. எனவே தற்போது வெளிநாட்டு பஞ்சு வாங்கினாலும், இந்தியா வந்து சேர மூன்று மாத காலம் ஆகும் என தொழில் துறையினர் கூறுகின்றனர். இதற்கிடையே உள்நாட்டில் பெரு நிறு வனங்கள் பஞ்சை பதுக்கி வைத்து செயற் கையாக விலையேற்றத்தை ஏற்படுத்தி வரு கின்றனர்.
இதனால்தான் அபரிமிதமாக நூல் விலை உயர்கிறது என்று தொழில் துறையினர் கூறுகின்றனர். டீமா ஏற்பாடு செய்து நடத்திய ஆலோ சனைக் கூட்டத்தில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், சாய ஆலை உரி மையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் சங்கங் களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். அதேசமயம் திருப்பூரில் முக்கிய ஏற்று மதியாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் யாரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம் ஏற்றுமதி யாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் வெளியிட்டுள்ள தனியான அறிக்கையில், பருத்தி, நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்் கொண்டுள்ளார். ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் இந்த நூல் விலை உயர்வுப் பிரச்சனையைக் கட்டுப் படுத்த வேண்டும். உலக சந்தையில் பருத்தி விலை உயர்வுக்கு ஏற்ப நூற்பாலைகள் விலையை உயர்த்துவதற்கு மாறாக, அதைவிட கூடுதலாக விலை உயர்வு செய்திருப்பதாகவும், அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள் ளார். இதுவரை திருப்பூரில் உற்பத்தியா ளர்கள் தரப்பில் நூல் விலை உயர்வு, சாய ஆலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை களில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஒரு நாள் வேலை நிறுத்தம், 48 மணி நேர வேலை நிறுத்தம் மற்றும் ரயில் மறியல் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் திருப்பூரின் பனியன் தொழில் வரலாற்றில் இதுபோல் ஆறு நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன் னெப்போதும் அறிவிக்கப்பட்டதில்லை. இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பின ரும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண் டும். ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழில் மற்றும் தொழி லாளர் சங்கங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளன.