districts

img

பணிநீக்க காலத்தை பணிகாலமாக அறிவித்திடுக சாலைப் பணியாளர்கள் ஆவேசம்

தருமபுரி, ஏப்.9- சாலைப் பணியாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி யில் சாலைப் பணியாளர்கள் வாழைக் கன்று நட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி  நீக்க காலத்தை பணி காலமாக முறைப்ப டுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத் தும் அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராம புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரும புரி நெடுஞ்சாலை துறை கோட்டம் பொறியா ளர் அலுவலகம் முன்பு வாழை மரம் வைத்து சாலைப் பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் எஸ்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் டி.சிங்கராயன், வட்டசெயலாளர் எஸ்.அண்ணாதுரை, வட்டபொருளாளர் கே.கிருஷ்ணன், நிதி காப்பாளர் எஸ்.ஜெயவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட செய லாளர் ஏ.சேகர், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சு பணியாளர் சங்க மண்டல செயலாளர் முனிராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.