அன்னூர், ஏப்.15- ரம்ஜான் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், அன்னூர் சந் தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. வியா பாரிகள் போட்டி போட் டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கிராமங்களிலும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர். அன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் புல் வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வாரந்தோறும் சனியன்று நடைபெறும் அன்னூர் சந்தை யில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற் பனை செய்வது வழக்கம். ரம்ஜான் பண்டி கைக்கு சில தினங்களே உள்ள நிலையில், வார இறுதி நாளான சனியன்று அன்னூர் சந்தையில் அதிகாலை 5 மணி முதலே ஆடு கள் விற்பனை களைகட்டியுள்ளது. விவசாயி கள் ஆட்டு சந்தை தொடங்கியதும் வியா பாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு களை வாங்கிச் சென்றனர். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் திரண்டனர். வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலை யாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திர மான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை யிலும் விற்பனை செய்யப்பட்டன. சனியன்று ஒரே நாளில் சுமார் ரூ.80 லட்சம் அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அன்னூர் வாரச் சந்தை களை கட்டியதால் அங்குள்ள டீக்கடை, உணவகம் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.