districts

img

அண்ணாமலை தேசிய கட்சியின் கோமாளி அமைச்சர் செந்தில் பாலஜி கடும் விமர்சனம்

கோவை, ஏப்.15- ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சொல்லிவிட்டு, எக்ஸ்எல் சீட்டை வெளி யிட்டுள்ள அண்ணாமலை ஆளும் தேசிய கட்சியின் கோமாளி என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சித்தார். கோவை வ உ சி மைதானத்தில் அமைக் கப்பட்டுள்ள “எங்கள் முதல்வர், எங்கள்  பெருமை” கண்காட்சி  நிறைவு விழாவில்  பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர் களை சந்தித்து பேசுகையில், அண்ணா மலை விவகாரம் தொடர்பாக, கழகத்தின்  அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்து தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளார். ரபேல்  வாட்ச் பில், மனசாட்சி உள்ள யாரும் அதை  பில் என எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பில் என ஒரு காகித்தை வெளியிட்டு இருக் கிறார். இந்த எக்ஸெல் சீட்டை தயாரிக்க தான் இத்தனை மாதங்கள் ஆனதா. தனக்கு எதுவுமே கிடையாது, சாப்பாடு ஒருவர் தரு கிறார் டீசல் ஒருவர் அடிக்கிறார், ஒருவர் ஓட்டுநருக்கு சம்பளம் தருகிறார், என்கிறார். ஆனால் அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதத்திற்கு  3.75 லட்சம்  ரூபாயை  நண்பர் ஒரு மாதம் உதவி செய்தார்  என்கிறார். வருடக்கணக்கில் யாராவது உதவி செய்வார்களா. வார்ரூமில் இருக்கும்  வசூல்தான் தான் நண்பரா? என கேள்வி எழுப்பினார். தான் உள்பட தன்னை சார்ந்தி ருக்கிறவர்கள் அனைவரும் தேர்தல்  ஆணையத்தில் கணக்கை சமர்ப்பித்திருக் கிறோம்.

அதை திரும்ப எடுத்து வெளி யீட்டு, கம்யூனிஸ்ட் மாதிரி செய்யப்போ கிறேன் என்றவரின் அபிடவிட்டை எடுத்து பாருங்கள், சொந்த நிதியிலிருந்து  செய்யப் பட்ட செலவு ஜீரோ என போடப்பட்டுள்ளது.  வாட்ச் வாங்கியவரின் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் வாங்கியது நாலரை  லட்சம், மூன்று மாதம் கழித்து இவருக்கு மூன்று லட்சத்திற்கு விற்றதாக கூறுகிறார், கிடைக்காத அரிதான பொருள், காலங்கள் ஆக ஆக அதன் விலை மதிப்பு கூடும். எப்படி இரண்டு மாதத்தில் இவருக்கு விலையை குறைத்துக் கொடுக்க  முடியும்? அந்த வாட்ச் எண்ணை குறிப்பிடும்  ஒன்றில் 149 மற்றொன்று 147, அவர் கொடுத்த பில் எக்ஸ் எல் சீட்டில் மாற்றங்கள் என அனைவரும் கேட்கின்றனர். ஒரு பொய்யை தான் வாங்கிய வெகுமதியை, வாங்கிய லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை தற்போது சொல்ல ஆரம்பித்து விட்டார். ஒரு தேசியக் கட்சியில் இருக்கிறார் என்ப தற்காக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும்,  முகாந்தரமும் இல்லாத குற்றச்சாட்டு களுக்கு பத்திரிகையாளர்கள் நேரத்தை வீணாடித்து அதில் என்ன பயன் இருக்கிறது.  ஒரு முகாந்திரம், ஒரு ஆதாரம் ஒரு அடை யாளம் இல்லை. கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம், ஆனால் இருக்கிறவர் கோமாளியாக இருந்தால் என்ன செய்வது என்றார்.