கோவை, ஜூன் 17- பாஜக தலைவர் அண்ணா மலை ஒரு படித்த முட்டாள் என தமிழக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சாடியுள்ளார். கோவை மாநகராட்சியில் சாலை விரிவாக்கம் செய்தல், புதிய சாலை அமைத்தல், நகர் நலத்தின் புதிய கட்டிட பணிகள், குடிநீர் தொட்டி கட்டுவது உள்ளிட்ட பணி களை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெள்ளியன்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், கோவை மாநகராட்சியை பொறுத் தவரை அனைத்து சாலைகளும் புதிதாக சீரமைக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட சாலைகள் என்ற நிலையை முதலமைச்சரின் ஆட்சி யில் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன என்றார். இதனையடுத்து செய்தியாளர் ஒருவர் பாஜக தலை வர் அண்ணாமலை பற்றி கேட்கை யில், தமிழகத்தில் மக்கள் பிரச்ச னையை எடுத்து வந்தால் நட வடிக்கை எடுக்கலாம். ஆனால் தொலைக்காட்சி நேரலையில் வர வேண்டும் என்பதற்காக அண்ணா மலை கருத்து சொல்லி வருகிறார். கோவை மாநகராட்சி வெற்றி பெற 100 வார்டில் எவ்வளவு முயற் சித்தார்கள். ஆனாலும், வெற்றி பெற முடியவில்லை. மேலும், வீர வசனம் பேசக்கூடிய அண்ணா மலை அரவக்குறிச்சியில் ஏன் மண்ணை கவ்வினார்? மக்கள் ஏன் விரட்டி அடித்தார்கள்? அண்ணா மலை அரவக்குறிச்சியில் ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்.
அந்தப்பணம் அவர் காவல் துறை யில் பணியாற்றிய சம்பளமா? அல்லது ஆடு மேய்த்துக் கொடுத் ததா? என்பது தெரியவில்லை. நேர்மையான அதிகாரி போல மாயத்தோற்றம் அண்ணாமலை உருவாக்குகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் 143 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்துள்ளார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங் களில் எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை. நிலக்கரி தட்டுப்பாடு இருந்த சூழலில் கூட தடையில்லாத மின்சாரம் வழங்கப் படுகிறது. பாஜக ஆளும் குஜராத் தில் தொழிற்சாலைகளுக்கு ஏன் மின்வெட்டு அறிவித்தார்கள்? அரசி யல் சார்ந்து எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என நினைப்ப வர்கள், அணில் போன்ற உயிரினங்க ளால் மின் விநியோகங்களில் பாதிப்பு ஏற்படுமா? ஏற்படாதா? என இணையதளத்தில் படித்த முட்டாள் அதிமேதாவி தேடி பார்த்துவிட்டு, கருத்து சொல்லவும். விளம்பரத் துக்கும், வேலைக்கும் வித்தியா சம் உள்ளது. நீங்கள் சொன்ன நபர் (அண்ணாமலை) விளம்பர மோகத் தில் உள்ளார். பாஜக பிரதான கட்சி என்பதற்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அண்ணாமலை மட்டமான அரசியல் வாதி. தரம் தாழ்ந்த அரசியல் வாதி பேச்சுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலுக்கு மத்திய தேர்தல் ஆணையம் என பதிவு போட்ட அண்ணாமலை, ஒன்னா நம்பர் படித்த முட்டாள், என சாடினார்.