எழுத்தாளரும், ஊடகவியலாளருமான வே.பிரசாந்த் எழுதிய “ஆனை மலை” நாவல் வெளியீட்டு விழா கோவை கொடிசியா புத்தகக்கண்காட்சியில் புதனன்று நடைபெற்றது. எதிர் வெளியிட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் பாமரன் ஆனைமலை நூலை வெளியிட, எழுத்தாளர் ச. பாலமுருகன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் எழுத்தாளர் மயிலை பாலு, மருத்துவர் மகேஸ்வரன், திருப்பூர் ஈஸ்வரன், யூ.கே.சிவஞானம், தமுஎகச மாவட்டச்செயலாளர் அ.கரீம், வழக்கறிஞர் ரேணுகா தேவி, எதிர் வெளியிடு அனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.