districts

img

அங்கன்வாடி ஊழியர்கள் இன்று செல்போனை ஒப்படைக்க முடிவு

திருப்பூர், ஜூன் 28 – அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் பணிகளை செல்போ னில் பதிவு செய்யும் முறையால் பல்வேறு சிக்கல்கள்,  நெருக்கடிகளைச் சந்திப்பதாகவும், செல்போன் பழுதா னால் அதற்கு செலவிட முடியாமல் சிரமப்படுவதாகவும் கூறி, தங்கள் செல்போன்களை வட்டார அலுவலகங்களில்  ஒப்படைக்கும் போராட்டத்தை புதன்கிழமை நடத்துகின்ற னர். பல்லடத்தில் திங்களன்று நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு கூட்டத்தில்  இப்போராட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிக ரமாக நிறைவேற்றுவது என்றும், முந்தைய பதி வேடு முறையை தொடர்வதற்கு 30ஆம் தேதி வியாழக்கி ழமை சென்னை தரமணியில் உள்ள இயக்குநர் அலுவல கத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்பதென்றும் தீர் மானிக்கப்பட்டது. இத்தகவலை அங்கன்வாடி ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் டி.சித்ரா, மாவட்டச் செயலாளர் கே. சித்ரா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளனர்.

;