districts

img

காட்சிப்பொருளாக உள்ள அங்கன்வாடி மையம்

கோபிசெட்டிபாளையம், டிச.10- கோபிசெட்டிபாளையம் அருகே பல லட் சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, காட்சிப் பொருளாக உள்ள அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்  என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் சட்டமன்ற தொகுதி, டி.என்.பாளையம் ஒன்றியம், அக்கரை கொடிவேரி ஊராட்சி யில் சிங்கிரிபாளையத்தில் புதிய அங்கன் வாடி மையம் கட்டடம் ரூ.11.90 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டடப்பணிகள் முடிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் தற் போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இத னால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் போதிய வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையத்திற்கு செல்வதால் பல்வேறு சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். சமந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தைகளின் நலன் கருதி காட்சிப்பொருளாக உள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.