districts

img

பெண்களின் படைப்புகள் புதிய உலகத்தைப் படைக்கின்றன புத்தகத் திருவிழாவில் ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சு

திருப்பூர், பிப். 1 – ஆண்களின் படைப்புகள் பழைய உல கத்தை மீட்டுருவாக்கம் செய்து கொண்டி ருக்கும்போது, பெண்களின் படைப்புகள் புதிய உலகத்தைப் படைக்கின்றன என்று எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி கூறி னார். 20ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வில் புதன்கிழமை பெண்மொழி எனும் புதிய  சூரியன் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண் டாள் பிரியதர்ஷினி உரையாற்றினார். அப் போது அவர் கூறியதாவது: காந்தியை எங்கே  தவறவிட்டோம். காந்தியை சுட்டுக் கொல் கின்ற பொம்மையில் குருதி வழிகின்றதைப் பார்த்து கொண்டாடுகின்ற மனநிலைக்கு எப் போது நாம் மாறினோம் என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. எங்கே இளைஞர்களைத் தவறவிடுகிறோம்? எங்கே  காந்தியை கொண்டாட வேண்டிய மனநிலை யில் இருந்து தவறுகிறோம்? மகாத்மாவா? கோட்சேவா? என்று கேட்டால் காந்தியை ஏற் கிறோம். கோட்சேயை அப்புறம் வைக்கக்கூ டாது, அப்புறப்படுத்தி வைக்க வேண்டும் என் பதுதான் நமக்கான தீர்வாக இருக்க முடியும்.  கோட்சே ஒன்றும் தெய்வப்பிறவி அல்ல, அவரை அப்புறப்படுத்தி வைப்போம் என நாம் சூளுரைக்க வேண்டும். அப்படி இருந் தால்தான் எதிர்கால இந்தியாவை காப்பாற்ற  முடியும். விஷமிகள் குழப்பம் விளைவிக்க முயற்சி பார்த்தீனியங்கள், விஷ ஜந்துகள், அரக் கர்களை சூரசம்ஹாரம் செய்வதற்காகத் தான் இங்கே புத்தகக் கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். கொங்கு தேசத்து மக் கள் தேசியத்தையும், தெய்வீகத்தையும் கண் களாக மதிக்கின்ற மக்கள். அந்த நிலையில்  இங்கே எப்படி நச்சுப் பாம்புகள் உள்ளே வரு கின்றன என்ற கேள்வியை இளைஞர்களுக் குச் சொல்லித்தர வேண்டும். தேசியம், தெய் வீகம் எது என்பதையும் சொல்லித்தர வேண் டும் என்று ஆண்டாள் பிரியதர்ஷினி கூறி னார். அப்போது அங்கிருந்த ஒருவர் எழுந்து அவரைப் பேசவிடாமல் குறுக்கிட்டு, எதிர்ப் புத் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஆண் டாள் பிரியர்ஷினி, தேசியம், தெய்வீகம் என்று  சொல்வது எங்களுடைய உரிமை. காந்திஜீக் கும் உரிமை என்று பதிலடி கொடுத்தார்.  இக்கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவரை யும், அவருடன் வந்த விஷமிகளையும் காவ லர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து சொற்பொழிவாற்றிய ஆண்டாள் பிரியதர்ஷினி, ஒரு வார்த்தை யைச் சொல்லிவிட்டால் உடனே சுருக்கென்று  பாய்ந்து விடாமல், இங்கு இருப்பவர்கள், இவர் என்ன சொல்ல வருகிறார் என்ற விரிந்த  மனதோடு கவனித்துக் கேட்டுக் கொண்டிருப் பதற்கு வணக்கம் தெரிவிக்கிறேன் என்று கூறி னார். இந்த பொறுமை, நிதானம், சகிப்புத் தன்மை இதுதான் நமக்கு இப்போது மிகத் தேவையாக இருக்கிறது என்று சொல்லி, குழப்பம் விளைவிக்க முயன்றவர்களை மறைமுகமாக விமர்சித்தார். பெண்மொழி எனும் புதிய சூரியன் பெண்மொழி எனும் புதிய சூரியன் என்ற  தலைப்பில் தொடர்ந்து பேசிய ஆண்டாள் பிரி யதர்ஷினி தனது உரையில் கூறியதாவது:  ஆண்களின் படைப்புகள் பழைய உலகத்தை  மீட்டுருவாக்கம் செய்கிறதென்றால், பெண்க ளின் படைப்புகள் புதிய உலகத்தைப் படைத் துக் கொண்டிருக்கின்றன. பெண்களின் பார் வையில் இருந்து புராணத்தைப் பார்க்கும் போது அது வேறு ஒரு ரகசியத்தைச் சொல் லும் இந்த நூற்றாண்டில்தான் பெண்கள்  வார்த்தைகளாக தங்கள் வலிகளை தெரிவிக் கிறார்கள். 20 நூற்றாண்டுகளாக பெண்களின் வலிகள் மௌன மொழிகளாகத்தான் இருந் தன. கேள்விகளுக்கு பதிலைத் தேடுங்கள் என்பதை விட அவளது வாயை அடைத்துவி டுங்கள் என்பது சமூகத்துக்கு சுலபமானதாக  இருக்கிறது. உலகெங்கும் பெண்களின் மௌனத்தைத்தான் பெண் படைப்பாளிகள் தற்போது படைப்புகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் மனசாட் சியைத் தொடுவதுதான் பெண் எழுத்தின் நோக்கமாக இருக்கிறது என்று ஆண்டாள் பிரி யதர்ஷினி கூறினார்.