சேலம், ஆக.13- வாழப்பாடி அருகே உள்ள புழு திக்குட்டை ஆனைமடுவு அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை கிரா மத்தில் வசிஷ்ட நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனை மடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக் குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பாளையம், சந்திர பிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங் களில் 5,011 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரி களும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப் படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறு கின்றன. கடந்த மே மாதம் வரை அணையில் 10.60 அடியில் 12.87 மில்லி லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருந்ததால், குட்டை போல சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இந்நிலையில், வாழப்பாடி பகுதி யில் அவ்வப்போது கோடை மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லி யன் கன அடி தண்ணீர் தேங்கியது. ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணை யின் நீர்மட்டம் உயர்ந்து, தற் போது 30.84 அடியை எட்டியுள் ளது. அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே அணையின் நீர்மட்டம் படிப் படியாக உயர்ந்து வருவதால், இந் தாண்டு இறுதிக்குள் அணை தனது முழுக்கொள்ளளவையும் எட்டி நிரம் பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் அணை பாசன விவசாயிக ளும், சுற்றுப்புறக் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.