திருப்பூர், டிச. 28 - ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியில் வேலை தொடங்கி பல ஆண்டுகள் ஆகி யும், இன்னும் கட்டி முடிக்கப்படாத, நியாயவிலைக் கடை கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியு ள்ளது. ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக் கங்காட்டு புதூர் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு 350 க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. இப்பகுதியில் வசிக் கும் மக்கள் நியாயவிலை பொருட்கள் வாங்க ஈட்டிவீரம்பாளையம் மற்றும் எஸ்.எஸ்.நகர் பகுதியில் உள்ள நியா யவிலைக் கடைகளுக்குச் சென்று வந்த னர். இதனால், அன்றைய ஐந்தாவது வார்டு உறுப்பினர் மாராள் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கு நியாயவிலை கடை கட்டிடம் கட்டித் தரும்படி திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமாரிடம் பல முறை மனுக் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இங்கு நியாயவிலைக் கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகள் முடிந்த நிலையில், இந்த கடை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி கணக்கம்பாளையத்திற்கு மாற்றப் பட்டு விட்டதாகக் கூறி பணியை பாதி யில் நிறுத்திவிட்டனர். இதையடுத்து தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், நிலு வையில் உள்ள கட்டிடப் பணிகளை மீண்டும் மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் அப்போதும் கட்டுமானம் முழுமை அடைவதற்கு முன்பே நிதிப் பற்றாக்குறை என்று சொல்லி பணி நின் றுபோனது. இப்படி கடந்த நான்கு ஆண்டுகளாக அரைகுறையாக நடந்து வந்த பணி யால், நியாய விலைக் கடை கட்டிடம் முற்றுப்பெறாமல் இருக்கிறது. இதனி டையே இந்த நியாய விலைக் கடை கட்டிடப் பணி மீண்டும் ஜனவரி 1ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கும் என்று நிர்வாகத்தரப்பில் கூறப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட் டிட பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாறியும் இன்னும் முடிக்கப்பட வில்லை. எனவே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க நாங்கள் தொலை தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் இங்கு கட்டிடப் பணிகள் பாதி யில் நிற்பதால் இந்த கட்டிடத்தை இரவு நேரங்களில் சிலர் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுத்தி வரு கின்றனர் என்றும் மக்கள் கூறினர். இது குறித்து பலமுறை அதிகாரி களுக்குத் தெரிவித்தும், இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தவும், நியாயவிலைக் கடையைக் கட்டி முடிக்கவும் நட வடிக்கை எடுக்காமல் உள்ளனர். விரை வில் இக்கட்டிடத்தைக் கட்டி முடித்து நியாயவிலைக் கடையை எங்கள் பயன் பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும், அதன் மூலம் அச்சுறுத்தலாக உள்ள சமூக விரோதிகளின் தொல்லையும் ஒழி யும் என்றும் கூறினர்.