சேலம், டிச.21- அம்பேத்கரை அவமதித்த உள் துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் அம்பேத் கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமித்ஷாவை கைது செய்ய வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை திரும் பப்பெற வேண்டும். சர்வதேச ஊழல் குற்றவாளி அதானிக்கு துணை போகக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிபிஎம் வடக்கு மாந கரச் செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா, மாவட்டக்குழு உறுப் பினர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மேட்டூர் வட்டம், குஞ்சாண்டியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன் றியச் செயலாளர் எஸ்.வசந்தி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி.தங்க வேலு, வழக்குரைஞர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்ட னர். மேச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஒன்றியச் செயலாளர் ஜி. மணிமுத்து தலைமை வகித்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஏ.ராமமூர்த்தி, பி.தங்கவேலு, பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.
விசிக ரயில் மறியல் சேலம்
ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாநகர மாவட்ட துணைச்செய லாளர் வேலு நாயக்கன் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மண்டலச் செயலாளர் இமயவர்மன் அங்கப்பன், தொகுதி செயலாளர் ஆதித்தமிழன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப் போது, ரயில் மறியல் செய்ய முற் பட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் நிறுத்தியதால், அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி தருமபுரி மாவட்டம், பென்னா கரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் பென்னாகரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவானந் தம் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், ஜி.சக்திவேல், மாவட்டக்குழு உறுப் பினர்கள் வி.ரவி, கே.அன்பு, எம்.வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அண்ணா சிலை அருகே, சிபிஎம் நகரச் செயலாளர் சீனிவா சன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயி கள் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலாயுதம், முன்னாள் ஒன்றி யச் செயலாளர் மனோகரன், ஆண் டிபாளையம் ஊராட்சி மன்றத் தலை வர் ஆதிநாராயணன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேஷ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நக ரக்குழு உறுப்பினர் டி.சி.வீரமணி நன்றி கூறினார்.