கோவை, ஜூலை 27- அம்பானியின் வீட்டுத் திரும ணமே, இந்தியாவின் மகிழ்ச்சி என் பது போல ஊடகங்கள் எழுதித்தள் ளுகிறது. அழைப்பிதழ் அனுப்பா மலேயே மொய்ப்பணத்தை வசூ லித்து உள்ளதாக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்கத்தின் 65 ஆவது ஆண்டு மாநாடு மற்றும் 38 ஆவது பொதுக்குழு கூட்டம், கோவை மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹாலில் சனியன்று நடைபெற் றது. இந்நிகழ்வில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.ர மேஷ் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்புகள் பாஜகவுக்கு கடிவாளத்தை போட் டுள்ளது என்றாலும், பாஜக கடிவா ளத்தை உணர்வு பூர்வமாக ஏற் காது. இன்னும் அதை மீறி திமிர முயற்சிக்கிறது. அதுவே தற்போ தைய பட்ஜெட்டில் வெளிப்பட்டுள் ளது. அம்பானியின் திருமணமே இந்தியாவின் மகிழ்ச்சி என்பது போல ஊடகங்களும் எழுதித் தள் ளுகின்றன. அவர் வீட்டு திரு மணம் இந்தியாவில் செல்வக் குவிப்பு எவ்வளவு என்பதன் சாட்சி யம். 8 கோடி வேலை வாய்ப்பு களை உருவாக்கியதாக நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால், உத்த ரப்பிரதேசத்தில் 16 ஆயிரம் காவ லர்கள் தேர்வுக்கு 48 லட்சம் பேர் போட்டி போடுகின்றனர். 7500 அரசு பணிகளுக்கு 24 லட்சம் பேர் விண் ணப்பம் செய்கின்றனர்.
ஏர் இந்தியா 2 ஆயிரத்து 268 காலி இடங்க ளுக்கு, மும்பையில் 25 ஆயிரம் பேர் குவிந்தனர். நாட்டின் வருவாய்க் கும் வேலை வாய்ப்புக்கும் எம்எஸ் எம்இ நிறுவனங்கள் தான் பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், இந்த பட்ஜெட்டில் அவை புறக் கணிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி இவ் வளவு பெரிய நிறுவனம். பல லட்சம் கோடி சொத்துக்களை கொண்ட நிறுவனம். ஆனால், புதிய பணி நியமனங்கள் எவ்வளவு? அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங் கத்தின் கோரிக்கை ஏற்கப்படாமல் உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, ஏற்றத் தாழ்வுகளை குறைக்க பட்ஜெட்டில் என்ன இருக்கிறது. வேலை வாய்ப்பை பற்றி வாய்ப்பந்தல் போட்டு இருக் கிறதே தவிர தீர்வு என்ன தந்திருக் கிறது? வருமான திரட்டலில் சாதா ரண நடுத்தர மக்களுக்கு என்ன நிவாரணம்? பழைய வருமான வரி முறைமையை முற்றிலுமாக காலி செய்ய நினைக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கை களை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றார்.
இதனைத்தொடர்ந்து, இன்சூ ரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்க துணைச் செயலாளர் எம். கிரிஜா வாழ்த்தி பேசும்போது, இந்திய நாட்டின் மக்களுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண் டிய நிதியமைச்சர் மக்களால் தேர் ர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள். ஆனால், எல்ஐசி ஊழியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊழியர்களின் ஊதியம் சம்பந்த மான பேச்சுவார்த்தைக்கு சங்க நிர்வாகிகள் பணி ஓய்வு பெற்றவர்க ளாக இருந்தால் பேச்சுவார்த்தை யில் பங்கேற்க முடியாது என்கின்ற னர். இது எந்த வகையில் சரியா னது. பொதுமக்களின் வாங்கும் சக்தியை முறிக்கும் வகையில் ஓட்ட உறுஞ்சுவதாக, ஒன்றிய ஆட்சியா ளர்கள் நிதி நிலை அறிக்கை இருக்கி றது. நம்மை உயர்த்தும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை. அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஆன செலவை நமது தலையில் ஏற்றி விட்டனர். நமக்கு அழைப் பிதழ் கொடுக்காமல் மொய் பணத்தை மட்டும் ஜியோ கட்டண உயர்வு மூலம் நம்மிடம் வசூலித்து விட்டனர், என்றார். மாநாட்டில் தென் மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் சி.முத்துகுமாரசாமி, துணைத்தலைவர் ஆர்.தர்மலிங் கம், இணைச் செயலாளர் வி.சு ரேஷ், கோவை மண்டல பொதுச்செ யலாளர் துளசிதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.