சேலம், ஆக. 28- அதிகாரிப்பட்டி ஊராட்சியை, மாந கராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி பெண்கள் சேலம் கோட்டை மைதானத்தில், புதனன்று நூறுநாள் வேலைத்திட்ட அடையாள அட்டையுடன் உண்ணாவிரத போராட் டத்தில் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் அயோத்தியாபட் டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதி காரிபட்டி ஊராட்சியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் 1,320 பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இந்நி லையில், அதிகாரிப்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பியே உள்ள குடும்பங்க ளின் நிலை பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறி தங்களது ஊராட்சியை மாந கராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரி வித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கள் கோட்டை மைதானத்தில் வேலைக் கான அடையாள அட்டையுடன் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.