ஈரோடு, டிச.26- எஸ்.ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் படிக் கும் மேசைகள் மற்றும் நாற்காலிகள் வழங்கினர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஒன்றியத்தில் எஸ். ஆலாம்பாளையம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் கள், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாண வர்கள் அமர்ந்து படிக்க 5 மேசைகள் மற்றும் 30 நாற் காலிகள் வழங்கினர். இதையடுத்து முன்னாள் மாண வர்களின் இந்த உதவிக்கு அப்பள்ளியின் ஆசிரியர் கள் நன்றி தெரிவித்தனர்.