நாமக்கல், அக்.29- திருச்செங்கோடு அருகே துத்திப்பாளையம் அரசு நடு நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஞாயி றன்று சந்திப்பு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ளது துத்திப்பாளையம் நடுநிலைப்பள்ளி. இந்த நடுநிலைப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை படித்த 30 மாணவ, மாணவிகள் பள்ளியில் ஒன்று கூடி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு, திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை ஏற்றார். ஓசூர், நாமக்கல், கோவை போன்ற நகரங்களில் வசித்து வருகின் றனர். இவர்களை தனபால், வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இம்மாணவர்கள், தங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு தங்கள் மரியாதை செலுத்தும் விதமாக காலில் விழுந்தனர். அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதேபோல் ஆசிரியர் களும், மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். இந்த நிகழ்வில், முன்னாள் மாணவ, மாணவிகள் குடும் பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 27 வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை போல இன்றும் தாங்கள் ஆசிரியர்களுடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்.