பள்ளிபாளையம், மார்ச் 19- பள்ளிபாளையம் அரசுப்பள்ளிக்கு, “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நிதி வழங்கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை உயரப்படுத்த வும், சேதமடைந்த வகுப்பறையை சீரமைத்தல் ஆகிய பணிக்கு சுமார் ரூ.10 லட்சம் செலவாகும் என திட்ட மிடப்பட்டது. இந்நிலையில், அரசுப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் (1971 - 1972) “நமக்கு நாமே” திட்டத்தில் சார்பாக ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 143க்கான வரைவு ஓலையை, பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ் மற்றும் துணைத்தலைவர் ப.பாலமுருகன் முன்னிலையில், நகராட்சி மேலாளரி டம் சனியன்று வழங்கினர். இதேபோன்று, பள்ளிபாளை யம் நகராட்சி வளம் பெற, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உதவிடுமாறு பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிலதிபர்கள், முன்னாள் மாணவர்கள், தன் னார்வலர்களுக்கு நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.