districts

img

நீர்நிலை புறம்போக்கில் வசிப்போருக்கு மாற்று இடம் : மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஈரோடு, பிப்.01- கிருஷ்ணாபுரத்தில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிக் கும் 13 குடும்பங்களுக்கு உடன டியாக மாற்று இடம் வழங்கிட வேண்டுமெனவும், அதுவரை அவர்களை வெளியேற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், கெட்டிசமுத்திரம் கிரா மம், கிருஷ்ணாபுரத்தில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசிக் கும் 13 குடும்பங்களுக்கு உடன டியாக மாற்று இடம் வழங்கிட வேண்டும், அதுவரை அவர்களை  வெளியேற்றும் முயற்சி மற்றும் வீடுகளின் மின் இணைப்புகளை துண்டிக்கும் முயற்சி ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் செவ்வாயன்று சம்பந்தப்பட்ட  இடத்தை நேரில் பார்வையிட்ட னர். முன்னதாக, பாதிக்கப்பட்ட  குடும்பத்தினரை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வி.மாரி முத்து, தாலுக்கா கமிட்டி உறுப்பி னர் எஸ்.செபாஸ்டியன் ஆகி யோர் நேரில் சந்தித்து விபரம் கேட்டறிந்தனர். மேலும் கெட்டிசமுத்திரம் ஏரிப் பகுதியில் இருந்து பல மீட்டர் தூரத்தில் உயரமான கரட்டுப்பகு தியில் எந்தவகையிலும் எந்தக் காலத்திலும் நீர்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பே இல்லாத இடத் தில் சொந்த வீடுகள் கட்டி குடியி ருக்கும் இந்த மக்களை நீர்நிலை காரணம் கூறி வெளியேற்றுவது இயற்கை நியதிக்கு எதிரானது. இந்த பகுதி எந்த அடிப்படை யில் பார்த்தாலும் நீர்நிலை பாதிப்பு பகுதியில் வரவே வராது. ஆகவே, தமிழக அரசும், பொதுப் பணித் துறையும் மேடான கரட்டுப் பகுதியில் வசிக்கும் இந்த 13 குடும் பங்களை வெளியேற்றம் செய்யும்  நடவடிக்கையை கைவிட வேண் டும். மேலும், இந்த 13 குடும்பங்கள் வசிக்கும் இந்த இடத்தை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு  மார்க்சிஸ்ட்  கட்சி  சார்பில் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.