திருப்பூர், ஆக.5- ஆத்துப்பாளையம் அருகில் குடியிருப்பு களுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வலியுறுத்தி சிஐடியு தலைமையில் அப் பகுதி மக்கள் உதவி மின் பொறியாளர் அலு வலகத்திற்குள் சனியன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்துப்பாளையம் விநாயகர் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் மின்மாற்றி அமைத்துள் ளனர். வீடுகளுக்கு அருகில் நெருக்கமான இடத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அந்த மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கும்படி கேட்டுள் ளனர். இதற்கு கவுன்சிலர் சொன்ன இடத்தில் தான் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறி வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்று மின்வாரியத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்த அப்பகுதி மக்கள் அந்த மின் மாற்றியை வேறு இடத்திற்கு மாற்றி அமைக் கும்படி உதவி மின் பொறியாளர் அலுவலகத் தில் மனு அளித்துள்ளனர். இம்மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சிஐடியு பாத்திர தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கே.குப்புசாமி தலைமையில் ஆத்துப்பாளை யம் உதவி மின்பொறியாளர் அலுவலகம் முன்பு சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதைத்தொடர்ந்து உதவி மின் பொறி யாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத் தினர். உதவி மின் பொறியாளர்
செந்தில்கு மார் கம்பம் அமைப்பதற்கு மட்டுமே எனக்கு அதிகாரம் உள்ளது. அமைக்கப்பட்ட கம் பத்தை அகற்ற எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். இதையடுத்து பொதுமக்க ளும், சிஐடியு நிர்வாகிகளும் மின் வாரிய அலு வலகத்திற்குள் அமர்ந்து, மின் கம்பத்தை அகற்றும் அதிகாரம் உள்ளவர்கள் வந்து பேசும் வரை இங்கிருந்து செல்ல மாட் டோம், என்று கூறி 2 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி கவுன்சிலர் வரவழைக்கப்பட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, இன்னும் 20 நாட்களில் மின்மாற்றியை அகற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறு தியளித்தனர். இதையடுத்து போராட்டம் முடி வுக்கு வந்தது. முன்னதாக ஆத்துப்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கத் தலைவர் குப்புசாமி தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் கண்டன உரையாற்றினார். மூத்த தலைவர் வி.பி.சுப்பிரமணியம் மார்க் சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக் குழு உறுப்பினர்கள் பி.சின்னசாமி, பி.நவ பாலன், வாலிபர் சங்க வேலம்பாளையம் நகர தலைவர் பி.ரகுபதி உட்பட திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.