districts

img

விடுபட்ட மக்களுக்கும் விரைந்து மனைப்பட்டா வழங்கிடுக

தருமபுரி, மார்ச் 15- கள்ளிபுரம் பட்டியலின மக்க ளில் விடுபட்டோருக்கு விரைந்து வீட்டுமனைப்பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பென்னாகரம் துணை  வட்டாட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் வட்டத்திற்குட்பட்டது கள்ளிபு ரம் கிழக்கு, கள்ளிபுரம் மேற்கு கிரா மங்கள். இக்கிராமங்களில் கணி சமாக பட்டியலின மக்கள் வசித்து  வருகின்றனர். இவர்களில் பெரும்ப குதியினர் விவசாய நிலமற்ற கூலித் தொழிலாளர்கள். பலருக்கு சொந்த வீடு இல்லை. முன்னோர் கட்டிய வீடுகளில் இரண்டு, மூன்று  தடுப்புகளாக பிரித்து அதில் வசித்து  வருகின்றனர். இப்பகுதி மக்க ளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது.  மேலும், இக்கிராமத்தின் அருகி லுள்ள வருவதனஅள்ளி பகுதியி லுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில்  பட்டா வழங்க வேண்டும் என  வலியுறுத்தி, குடியேரும் போராட் டம் நடைபெற்றது. அதன்பின் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு பல கட்ட போராட்டங் கள் நடைபெற்றன. இதன் விளை வாக கடந்த மார்ச் 11 ஆம் தேதி தரு மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கள்ளிபுரம் கிழக்கு, மேற்கு கிராமங் களைச் சேர்ந்த 30 நபர்களுக்கு முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கி னார். மீதமுள்ள நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக பட்டா  வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. எனவே, பரிசீலனையில் உள்ள மீதமுள்ள 100க்கும் மேற்பட்ட  பட்டியலின மக்களுக்கு விரைந்து  மனைப்பட்டா வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பென்னாகரம் துணை வட்டாட்சியர் ஜெயலட்சு மியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்டத் தலைவர் மகாதேவன், செயலாளர் ஜே.பி.சுப்பிரமணி, பொருளாளர் எஸ்.வெள்ளிங்கிரி உள்ளிட்ட கள்ளிபுரம் கிழக்கு, மேற்கு கிரா மங்களைச் சேர்ந்த 100க்கும் மேற் பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.