உதகை, ஜூன் 29- மலை ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ளதாக, தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பாரம்பரியம் உண்டு. பெரும்பாலும் அந்த பாரம்பரியங்கள் எல்லாமே கட்டட கலை களாக, பல்லாண்டு காலமாக வாழும் சாட்சி யாக இன்றளவும் நிளைத்து நின்று வருகிறது. அப்படிப்பட்ட பாரம்பரிய சின்னங்களை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வும், பாரம்பரியச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்க ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஏப்.18 ஆம் தேதியன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பாரம்பரிய தினத்தில் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள், சிற்பங்கள், கட்டடங்கள் ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால், நம் தமிழ்நாட்டில் இருக்கும் ரயில் ஒன்றுக்கு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து கெளரவித் தது. அதுதான் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை இயக்கப்படும் “உதகை மலை ரயில்”. இந்த மலை ரயில் நிலையங்களில் கட் டடங்களின் பலமை மாறாமல் சுற்றுலா பயணி களின் தேவைகளை பூர்தி செய்யும் வகை யில் கார் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறை, பூங்கா போன்ற அடிப்படை தேவைகளை பூர்தி செய்து கொடுக்க வேண்டும் என்ப தற்காக குன்னூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல உத கையில் 8 கோடி ரூபாய்க்கும், மேட்டுப் பாளையத்தில் ஏழரை கோடி ரூபாய்க்கும் பணிகள் நடைபெறும் என்றும், இப்பணிகள் அனைத்தும் 6 மாதத்தில் முடிவடையும் என ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
ஆடர்லி ரயில் நிலையத்தில் கேன்டீன்
இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைமேடை, முகப்பு அழகு, கட்டமைப்பு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்ட உள்ளது குறித்து தென் னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலையத்தின் பல பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் திட்ட தயாரிப்பு பணிகளை பார்வையிட்டு அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் நாட்டில் 64 ரயில் நிலையங்கள், அம்ரூத் பாரத் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் போக்குவரத்தில் சிறப்பு ரயில் இயக் கும் திட்டமும் உள்ளது. அத்துடன் நீலகிரி மலை ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் வனப்பகுதியில் உள்ள ஆடர்லி ரயில் நிலையத்தில் கேன்டீன் திறக் கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.