கோவை, டிச.29- சூயஸ் நிறுவனம் அறைகுறை வேலையை செய்வதாகவும், மாமன்ற உறுப்பினர்களை மதிக் காமல் தன்னிச்சையாக செய்படுவ தாக கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத் தனர். கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்த் குமார் தலைமையில் மாமன்ற கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் மாமன்ற உறுப் பினர்கள் பங்கேற்றனர். இதில், ஒப்பந்த தூய்மை பணி யாளர்கள் ஏற்கனவே பெற்றுவரும் தினக்கூலி PWD 2022-2023, நிர்ணயம் செய்த தொகையை அடிப்படை யாக கொன்டு சேமநலநிதி மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டு தொகை சேர்த்து ரூ-648.33 /ஐ ஜனவரி 1 ஆம்தேதி முதல் உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானத்தின் மீதான விவா தத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வி.இராம மூர்த்தி, ஆர்.பூபதி வரவேற்று பேசினர்.
வி.இராமமூர்த்தி பேசு கையில், தூய்மைப்பணியாளர் களுக்கான கூலி உயர்வு முறையாக சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இடையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்யாமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்றார். மேலும், மாந கரம் முழுக்க குடிநீர் விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சூயஸ் நிறுவனத்தினர் கெடுபிடியாக பணிகளை அறைகுறையாக செய்து வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடின்றி தன் னிச்சையாக செயல்படுகின்றனர். வரும் காலத்தில் சூயஸ் திட்டம் முற்றிலுமாக தடைசெய்யும் நிலை வரும். சூயஸ் நிறுவனப்பணி யாளர்கள் கவுன்சிலர்கள் கட்டுப் பாட்டில் செயல்படுவதை மாமான்றக் கூட்டம் உறுதிசெய்ய உத்திரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, மாநக ராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் களின் நலன் கருதி அவர்களுக்கு ஜன.1 ஆம் தேதி முதல் கூலியை உயர்த்தி 648 ரூபாயாக வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.