தருமபுரி, அக்.8- பாலக்கோடு பேரூராட்சியில் ஒகேனக் கல் குடிநீருடன் சுத்திகரிக்கப்படாத ஆற்று குடிநீர் கலந்து சுகாதாரமற்று விநியோகம் செய்வதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூ ராட்சியில் 18வார்டுகளில் சுமார் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவைக் காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றிக்கு 6லட்சம் லிட்டர் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. சமீப காலமாக ஒகேனக்கல் சுத்திகரிக் கப்பட்ட குடிநீருடன் பஞ்சப்பள்ளி ஆற்றி லிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட சுத்திகரிக் கப்படாத நீரையும் கலந்து முறைகேடாக பாலக்கோடு பேரூராட்சி சார்பில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இவ்வாறு வழங்கும் குடிநீர் சுத்தமாக இல்லாமல் மண்கலந்த நிறமாக வருவதா கவும், பிளீச்சிங் பவுடர் அதிகம் கலந்து வரு வதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின் றனர். ஒகேனக்கல் குடிநீரில், பஞ்சப்பள்ளி நிலத்தடி நீர் கலக்கப்படுவதால் அதிக புளோரைடு காரணமாக பொதுமக்களுக்கு பற்கள் மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற் பட்டு வருகிறது. மேலும் சிறுநீரகம், மூளை, தைராய்டு, கல்லீரல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் பாதைகள் ஏற்பட்டு வரு வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவில் உள்ளது.இதை குடிப்பதால் பற்கள், எலும்புகளில் ஆஸ்டியோபோராசிஸ் நோய் தாக்கம் ஏற் பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் எலும்புகள் விரைவில் பலவீனமடைய காரணமாவ தால், இதனை தடுக்க பல கோடி ரூபாய் செலவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தபட்டது. இந்நிலையில், பாலக்கோடு பேரூராட்சி யில் முறைகேடாக ஒகேனக்கல் சுத்திரிக ரிக்கப்பட்ட குடிநீருடன் பஞ்சபள்ளி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கலந்து விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், சமீப காலமாக இப்பகுதி மக்கள் பல்வேறு உடல் நல கோளாறுகளுக் கும், நோய் தொற்றுக்கும் ஆளாகி வருகின் றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சுகாதாரமான குடிநீர் விநியோ கத்தை உறுதி செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.