ஈரோடு, ஜன. 8- அரசு போக்குவரத்து ஊழியர்க ளின் வேலை நிறுத்தத்திற்கு அனைத் துவகை தொழிலாளர் ஐக்கிய தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள் ளது. போக்குவரத்து கழகங்களின் தொழிற்சங்க வரலாற்றில் புதிய வரலாறு படைத்த போராளி தோழர் எஸ்.நாராயணசாமியின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் புன்செய் புளியம்பட்டியில் அனுசரிக்கப் பட்டது. நிகழ்விற்கு அனைத்து வகை தொழிலாளர் ஐக்கிய தொழிற் ்சங்கத்தின் தலைவர் டி.சுப்பிரமணி தலைமை வகித்தார். சங்க பொரு ளாளர் ஏ.பி.ராஜு வரவேற்றார். தோழர் எஸ்.நாராயணசாமியின் நினைவு ஜோதியை அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க ஈரோடு மண்டல தலைவர் கே.மாரப்பன் ஏற்றி வைத்தார். சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் பி.கனகராஜ் படத்தினை திறந்து வைத்தார். சரோஜா நாராய ணசாமி கொடியேற்றினார். சங்கத் தின் பொதுச் செயலாளர் ப.மாரி முத்து சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து, அனுச ரிப்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அறிவிக்கப் பட்டுள்ள வேலை நிறுத்த போராட் டத்திற்கு, அனைத்துவகை தொழி லாளர் ஐக்கிய தொழிற்சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது எனத் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.