திருப்பூர், செப். 29- திருப்பூரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, கடந்த ஆண்டை விட கூடுதலான போனஸை 15 நாட்களுக்கு முன்பு வழங்க வேண்டும் என்று அனைத்து தொழிற் சங்கங்கள் வலியுறுத்தியுள் ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற் சங்கங்களின் ஆலோச னைக் கூட்டம் பி.என்.சாலை யில் உள்ள ஏஐடியூசி சங்க அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியூசி சங்கத்தின் பொதுச் செய லாளர் என்.சேகர் தலைமை வகித்தார். இதில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடந்த ஆண் டைக் காட்டிலும் தொழிலாளர்களுக்கு கூடுத லாக போனஸ் வழங்க வேண்டும். பனியன் தொழிற்சாலைகளிலும், செக்சன்களிலும் வேலை செய்து வரும் டைம் ரேட், பீஸ் ரேட் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பு போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கும் கடிதம் அளிக்க வேண் டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில், சிஐடியூ பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் நாக ராஜ், ஏஐடியூசி பனியன் சங்கச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், எல்பிஎப் பனியன் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளா ளர் பூபதி, ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் சிவசாமி, செயலாளர் செந்தில், ஹெச்எம்எஸ் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் முத்து சாமி, எம்எல்எப் பனியன் சங்கச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.