ஈரோடு, ஜன. 29- சோலார் பேருந்து நிலை யத்தில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதியளிக் குமாறு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளிக்கப்பட்டது. அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் எஸ்.சுப்பிரமணியன் தலை மையில் அளித்த மனுவில், ஈரோடு மாந கராட்சி, கரூர் சாலையில் சோலார் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப் படவுள்ளது. மாநகரின் மையத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் நோக்கில் சோலாரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கொடுமுடி, கரூர் வழியாகவும், மொடக்குறிச்சி வழியாக வெள்ளகோவில், மூலனூர் மற்றும் திருச்சி, திண்டுக்கல் போன்ற தென் மாவட்ட வழித்தட பேருந் துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் பூந்துறை, அறச்சலூர் வழியாக தாராபுரம், பழனி பேருந்துகளும் இங்கிருந்து இயக் கப்பட உள்ளன. இவ்விரண்டு, பேருந்து நிலையங்களுக் கும் இடையே சுமார் 8 கி.மீ தூரம் உள்ளது. இதனால் வந்து செல்லும் பயணிகளுக்கு ஆட்டோ வசதி தேவை என்பதால், 24 மணி நேரமும் ஆட்டோவை இயக்க புதிய பேருந்து நிலையத்தில் இடவசதி செய்து, 200 ஆட்டோ ஓட்டுநர்கள் வரை வாகனங்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநகராட்சி ஆணையா ளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட் டுள்ளது. சிஐடியு, எல்பிஎப், ஏடிபி மற்றும் ஐஎன்டியுசி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய கூட்டமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.