சேலம், செப்.14- மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி-யின் மறைவிற்கு, பல் வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி வியாழ னன்று காலமானார். அவரது மறைவையொட்டி, நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மட்டுமல் லாது அனைத்து கட்சியினரும் செங்கொடிப் புதல்வனுக்கு செவ்வஞ்சலியை செலுத்தி வரு கின்றனர். இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக்குழு சார்பில், சாமிநாதபுரம் பகுதியில் இரங்கல் கூட்டம் நடை பெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, வடக்கு மாநகரச் செயலா ளர் என்.பிரவீன்குமார், மாநகரக்குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் வள்ளுவர் சிலை அருகே இருந்து கோட்டை மைதானம் வரை இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மேவை.சண்முகராஜா தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன்,
திமுக மாநகரச் செயலாளர் ரகுபதி, சிபிஐ மாவட்டச் செயலாளர் மோகன், தமுமுக தலைவர் ஷேக் அகமது, சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மதிமுக மாவட்டச் செய லாளர் சங்கேஸ்வரன், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் சையது மூசா, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவதாபுரம் பகுதியில் நடைபெற்ற இரங்கல் நிகழ்வில், கட்சியின் மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஆத்தூரில் காந்தி சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அனைத்துக் கட்சி யினர் பங்கேற்ற இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. இதன்பின் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு, சிபிஎம் தாலுகாச் செயலாளர் ஏ.முரு கேசன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.குணசேகரன், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் என்.எம்.சடையன், திமுக நகரச் செயலாளர் கே.பாலசுப்ரமணியம், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வானவில், சிபிஎம் கெங்கவல்லி தாலுகாச் செயலாளர் பி.தமிழ்மணி உட்பட காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, பெத்தநாயக்கன்பாளையத் தில் கட்சி செயலாளர் காளிதாஸ், சேலம் கிழக்கு மாநகரம், 52 ஆவது வார்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பலர் கலந்து கொண்டு, தோழர் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தி னர். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கோகுல், துணைச் செயலாளர் டார்வின் ஆகியோர் கலந்து கொண்ட னர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில், சேலம் மெயின் தொலைபேசி நிலையம் அருகே இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண் டனர். நங்கவள்ளியில் நடைபெற்ற இரங்கல் நிகழ்வில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கவிதா, ஒன்றியச் செயலாளர் கே.ராஜாத்தி, மனிதநேய மக்கள் கட்சி ஒன்றியத் தலைவர் பரூக், செயலாளர் நாசர் கான் உட்பட பலர் கலந்து கொண் டனர். கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் பரமேஸ்வரி, சிஐடியு, மாதர், வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்..
தருமபுரி
தருமபுரி செங்கொடிபுரத்தில் நடைபெற்ற அஞ் சலி கூட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் சி.முரளி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, ஆர்.மல்லிகா, ஒன்றியச் செய லாளர் என்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் கே.பூபதி, ஏ.ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டனர். அரூர் ரவுண்டானா அருகே சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.குமார் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, சிபிஐ நிர்வாகிகள் கே.டி.ராஜி, செங்கொடி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சு னன், ஆர்.மல்லிகா ஆகியோர் பங்கேற்றனர். பாப்பிரெட்டிப்பட்டியில் அனைத்துக் கட்சி சார்பில் மௌன ஊர்வலமும், இரங்கல் கூட்டமும் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் அ.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் வஞ்சி, வட்டச் செயலாளர் தனுஷன், விசிக இளைஞரணி மாநில துணைச்செயலாளர் அதியமான், விவசாய அணி நிர்வாகி சுபாஷ், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாயக்கண்ணன், திராவிடர் கழக இலக்கிய அணி மாநில செயலாளர் மாரி கருணாநிதி உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செய லாளர். அ.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் மூத்த தோழர் பெ.அழகுதுரை, திமுக பேரூராட்சி மன்றத் தலைவர் வடமலை முருகன், மொரப்பூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மா.ரத்தின வேல், கவுன்சிலர் ஜெயக்குமார், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி ராஜ்கமல், விசிக நகரச் செயலாளர் ராபர்ட் சொக்கன், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.மாது, தமாக நகரத் தலைவர் லட்சுமி நாராயணன், பாமக ஒன்றிய துணை சேர்மன் பெரு மாள், அதிமுக நகரச் செயலாளர் கே.கே.தனபால், அம்பேத்கர் அறக்கட்டளை மேலாண்மை அறங்கா வலர் கி.கோவிந்தராஜ், சாலை போக்குவரத்து சங்க நிர்வாகிகள் (சிஐடியு) ஆகியோர் கலந்து கொண்டனர். பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.தங்கராஜ் தலைமையில் இரங்கல் கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். இண்டூர் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் பகுதிக்குழு செயலா ளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன், நல்லம்பள்ளி ஒன்றியம், நேரு நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இரங் கல் கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், பகுதிக்குழு செயலாளர் ஆர்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.சின்னசாமி, திமுக நகரச் செயலாளர் வி.சண் முகம், விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் தர்மன், காங்கிரஸ் நகரத் தலைவர் டி.தங்கராஜ், சிபிஐ நகரச் செயலாளர் ஜி.பெரு மாள், ஏஐடியுசி மாவட்ட துணைத்தலைவர் ஏ.முரு கேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏரியூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர் என்.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் குமார், சிபிஐ நிர்வாகிகள் தொட்டி, விடுதலை ஆகியோர் கலந்து கொண்டனர். கொப்பலூரில் பகுதிக்குழு செயலாளர் ஜி.சக்திவேல் தலைமையில் யெச்சூரி இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பென்னாக ரத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார். இதில் சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கோபால், விசிக மாவட்டச் செயலாளர் கருப்பண்ணன், காங்கி ரஸ் ஒன்றியத் தலைவர் நரேந்திரன், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் ரவி, நகரச் செயலாளர் வெங்க டாச்சலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.ஜீவா னந்தம், செல்வன், அன்பு, சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தருமபுரி நான்கு ரோடு பகுதியில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, சங்கத்தின் நகரச் செயலாளர் நிர்மலா ராணி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்டத் தலைவர் ஏ..ஜெயா, முன்னாள் செயலா ளர் எஸ்.கிரைஸாமேரி, நகரத் தலைவர் ஒய்.சுபா, ஒன்றியத் தலைவர் தமிழ்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் குறளரசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாலை பகுதியில் நடை பெற்ற தோழர் யெச்சூரி-யின் இரங்கல் கூட்டத் திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஆதிநாராயணன், என்.வேலுச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, யெச்சூ ரி-யின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி னர். பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத் திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் படைவீடு பெருமாள், எம்.அசோகன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே அனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜெயமணி, மதிமுக நிர்வாகி கணேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் அன்புமணி, திமுக நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, வழக்கறிஞர் சேகரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மனோகரன், நகரச் செயலாளர் ராயப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் வேலாயுதம் ஆகி யோர் கலந்து கொண்டனர். ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, சிபிஎம் மூத்த தோழர் எம்.ஜி.ராஜகோபால் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.செல்வராசு, நகரச் செயலாளர் சி.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.தங்கராஜ், பி.ராணி, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஜோதிபாசு, விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் மும்பை அர்ஜூன், சிபிஐ நகரச் செயலாளர் மணிமாறன், கல்வி சிந்த னையாளர் மன்ற நிறுவன தலைவர் கே..யசுந்த ராவ், பாமக நகரத் தலைவர்கள் மாது, கந்தசாமி, தமிழக மக்கள் தன்னுரிமை உரிமை கட்சித் தலைவர் ராஜேஷ், தமிழக மக்கள் தேசிய கட்சி தலைவர் சகோதர பாண்டியன், உள்ளாட்சி பொதுநல வியாபாரிகள் சங்க தலைவர் மாதேஸ்வ ரன், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் பி.தட்சிணாமூர்த்தி, ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் வெங்கடாச்சலம், குல்லுபாய் முறைச் சார தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.சங்க ரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, நாமகிரிப்பேட்டை, குமாரபா ளையம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், கொல்லி மலை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்துக் கட்சியினர் தோழர் சீத்தாராம் யெச்சூ ரி-யின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.