பொள்ளாச்சி, நவ.8- பொள்ளாச்சி நகராட்சி அலுவல கத்தில் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பாக திங்களன்று உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சியின் சார்பில் ஒப்பந்தத்திற்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் பழைய பேருந்து நிலையம் அருகில் செயல் படுகிறது. பொள்ளாச்சி நகராட்சி யின் சார்பாக நிர்ணயம் செய்த தொ கை ரூ.8 தான், ஆனால் ஒப்பந்ததாரர் 15 ரூபாய் மக்களிடத்தில் வசூல் செய் து கொண்டிருந்தார். இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பாக பல முறை நகராட்சி ஆணையளரிடம் முறையிட்டனர். மேலும், அதிக மாக வசூல் செய்வது முறையல்ல என நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் பொதுமக்களிடம் ரூபாய் 20 கட்டணம் வசூலிக்கிறார் என்ற தக வல் கிடைத்தவுடன் திங்களன்று நகராட்சி ஆணையரை சந்தித்து உடனடியாக அந்த ஒப்பந்ததாரர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மூன்று நாட்களுக் குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர். மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை இல்லை யெனில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று அனைத்து கட்சிகள் மற்றும் சமூக இயக்கத்தின் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பொள்ளாச்சி தாலுகா செயலாளர் அன்பரசன், மகாலிங்கம், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் வெளி யீட்டு செயலாளர் மனோகரன், பிரகாஷ், பாலமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வி.எஸ்.சுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கோவை தெற்கு மாவட்ட செய லாளர் பிரபு, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ராஜா ஜெமிசா ஆகியோர் கலந்து கொண்டனர்.